நம் முன்னோர்கள் சாமி என்ற பெயரில் நமக்கு கொடுத்துச் சென்ற அனைத்து சடங்குகளும், சம்பரதாயங்களின் பின் தமிழனின் ஒரு ஆழமான அறிவியல் ஒளிந்திருக்கும். அப்போது இருந்த மக்களுக்கு இதை புரிந்து கொள்ளும் அளவிற்கு பக்குவம் இல்லை என்பதன் காரணமாகவே நாம் தமிழர்கள் சாமி என்ற பெயரில் நம்மை செய்யச் சொல்லி அன்று முதல் இந்த தலைமுறை வரை கடத்தி வந்திருக்கிறோம். ஆனால் இதில் எங்க தவறு நடக்கிறது என்றால் நம் முன்னோர்கள் கூறியதை இன்றும் நாம் கடைபிடிக்கிறோம் ஏன் இவ்வாறு செய்கிறோம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளாமல் அதில் இருக்கும் சில செயல்முறைகளை நாம் மாற்றி விடுகிறோம் இந்த இடத்தில் தான் நாம் மிகப்பெரிய தவறு செய்கிறோம்.
உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் ஆடி மாதம் மாரியம்மனுக்கு விழா எடுத்து வீடுதோறும் வேப்பிலை கட்டி, கூழ் ஊற்றுவார்கள். ஆனால் இதற்குப் பின் தமிழரின் மிகப்பெரிய அறிவியல் ஒளிந்து இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா. ஆம், ஆடி மாதம் பருவநிலை மாறுவதால் காற்று சற்று உக்கிரமாக இருக்கும் அதன் மூலம் நோய்க்கிருமிகள் எளிதாக பரவி விடும். இதை தடுத்து நிறுத்துவதற்காகவே ஆடி மாதம் மாரியம்மனுக்கு விழா எடுத்து, வீடு வாசல் எல்லாம், வேப்பிலை கட்டி மஞ்சள் தண்ணீர் வைத்து முத்தம் தெளித்து வந்தோம்.
இதில் தமிழன் சில பணக்காரர்களை முட்டாளாக்குவதற்கு என்றும் சில காரியங்கள் செய்துள்ளான். அந்த ஆடி மாதத்தில் ஏற்படும் சில தொற்று நோய்களிலிருந்து நம்மை காக்க உடம்பில்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கு சில உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அந்த காலத்தில் பஞ்சம் அதிகமாக இருந்ததால் சாமியின் பெயரை சொல்லி பணக்காரர்களை ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூல் ஊற்றினால் நல்லது நடக்கும் என கூறி. முடியாத ஏழை எளியவர்களுக்கு கூல் ஊற்றினான். நாம் அப்படி குடிக்கும் கூலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே இருக்கும் இப்பொழுது புரிகிறதா ஆடி மாதம் ஏன் மாரியம்மனுக்கு விசேஷமான மாதம் என்று.அது போல தான் ஆரத்தி எடுப்பது கண் திருஷ்டி கழிப்பது என்ற பெயரில். இதை தமிழன் அறிமுகப்படுத்தினான் ஆரத்தி எடுப்பதின் முழு நோக்கமே நமக்கே தெரியாமல் நம்முடன் ஒட்டிக்கொண்டு வரும் விஷ அணுக்கள், நோய்க்கிருமிகளை அழிப்பதற்காக தான் பொதுவாக ஆரத்தி. ஆரத்தி தட்டில் மஞ்சள் அரைத்து அதனுடன் சுண்ணாம்பு கலக்கும்போது தானாகவே சிவப்பு நிறம் வந்துவிடும். அதன் பிறகு அதில் தீப சுடர் ஏற்றி ஆரத்தி எடுப்போம். இப்படி புதியதாக கல்யாணம் செய்தவர், குழந்தை பெற்றவர்கள், பல நாள் கழித்து வீடு திரும்பும் இவர்களிடம் இருந்து நோய் தொற்று நோய்க்கிருமிகள் வீட்டிற்குள் வராமல் இருப்பதற்காக ஆரத்தி எடுத்து வரவேற்று இருப்பார்கள். ஆனால் நாம் இன்று அதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் அறிவியலை மறந்துவிட்டு ஆரத்தி எடுக்கிறேன் என்ற பெயரில் குங்குமத்தை கரைத்து சிவப்பு நிறமாக மாற்றி அதற்கு மேல் வெற்றிலை வைத்து தீபம் ஏற்றி விடுகிறோம்.
ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…
பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…
புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…
கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…
பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…
கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…