பெரும்பாலும் எல்லார் வீட்டிலேயுமே வற்றல் வீட்டிலேயே செஞ்சு வச்சுப்போம். இந்த வற்றல் செய்வது ரொம்பவே ஈஸி அப்படின்னு சொல்லலாம் அதுலயும் இப்படி வெயிலுக்கு வற்றல் செஞ்ச காய வச்சா ஒரு நாளிலேயே சூப்பரா காஞ்சு போயிடும் அதை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிட்டா டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். சாப்பாட்டுக்கு சைடிஷா மட்டும் இல்லாம வெறும் வாயிலேயே சும்மா பொறித்து சாப்பிடலாம். இந்த வற்றல்ல பல வகைகள் இருக்கு அப்படின்னு கூட சொல்லலாம்.
பழைய சாத வடகம் கூழ் வடகம் ஜவ்வரிசி வடகம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். வீட்ல சாதம் மீந்து போனா கவலையே பட தேவையில்ல அதை அரைச்சு மிளகாய் தூள் உப்பு மட்டும் போட்டு வடக்கு மா போட்டு வெச்சிட்டோம் அப்படின்னா சைடு டிஷ் ஏதும் இல்லாத அப்போ எடுத்து பொறித்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.அந்த வகையில் இப்ப நம்ம கேழ்வரகு வற்றல் செய்ய போறோம். சிறுதானியங்கள்ல நம்ம என்ன உணவு செஞ்சாலும் அது ரொம்பவே ஆரோக்கியமானது அப்படின்னு சொல்லலாம்.
அந்த வகையில் இன்னைக்கு நம்ம இந்த கேழ்வரகு மாவு வச்சு செய்யக்கூடிய இந்தவற்றல் உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. டேஸ்ட் ரொம்ப வெரி சூப்பரா இருக்கும் நம்ம என்னதான் நிறைய வடகம் அப்பளம் அப்படின்னு சாப்பிட்டு இருந்தாலும் யாரும் இந்த கேழ்வரகவற்றுள் வீட்டில் சென்று சாப்பிட்டு இருக்க மாட்டீங்க ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்களே உங்க வீட்ல அடிக்கடி இந்த கேழ்வரகு வற்றல் செஞ்சு வச்சு சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு இந்த கேழ்வரகு வற்றல் ஆரோக்கியமானது. இப்ப வாங்க இந்த சிம்பிளான ஆரோக்கியமான கேழ்வரகு வற்றல் இந்த வெயில் காலத்தில் எப்படி வீட்டில் செஞ்சு வச்சுக்கிறது என்று பார்க்கலாம்
கேழ்வரகு வற்றல் | Ragi Vattral Recipe In Tamil
Equipment
- 1 அடி கனமான பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 2 கப் கேழ்வரகு மாவு
- 2 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் பச்சைமிளகாய் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கேழ்வரகு மாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்
- பிறகு அதில் பச்சை மிளகாய் விழுது தேவையான அளவு உப்பு சீரகம் சேர்த்து இடியாப்ப மாவு பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளவும்
- இப்பொழுது கொஞ்சம் ஆறிய பிறகு அதனை முறுக்கு அச்சில் போட்டு உங்கள் தேவைக்கேற்ப அதனை ஒரு காட்டன் துணியில் பிழிந்து வெயிலில் காய வைக்கவும்.
- இரண்டு நாட்கள் நன்றாக காய்ந்தவுடன் எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான கேழ்வரகு வற்றல் தயார்
Nutrition
இதையும் படியுங்கள் : வீட்டில் ஸ்நாக்ஸாக சாப்பிட மொறு மொறுன்னு இந்த தட்டையை உங்க வீட்டிலேயே ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!