பொதுவாக தமிழ்நாட்டில் சாம்பார் நமது அன்றாட உணவு பழக்கத்தில் இன்றியமையாதது. சாம்பாருடன் சாதம் பிணைந்து சாப்பிட்டால் தான் மதிய உணவு சாப்பிட்ட திருப்த்தி கிடைக்கும். அப்படி இருக்கையில் சாம்பாரை சுவையாக சமைத்தால் தானே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அதோடு, சாம்பிரில் பருப்பு மற்றும் காய் வகைகள் அதிகம் சேர்க்கிறோம், இதனால் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இதில் மிகவும் குறைந்த அளவிலான கொழுப்பு இருப்பதனால் உடல் எடையை பராமதிப்பதற்கும் உதவும்.
சாம்பார் வீட்டிலேய எளிய முறையில் செய்யலாம். இவை பருப்பு மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படுகின்றன. காய்கள் மற்றும் பருப்பு கலந்த உணவு என்பதால் உடலுக்கு தேவையான சக்தி எளிதில் கிடைக்கும்.
Course சாம்பார்
Cuisine Indian, இந்தியன்
Keyword Sambaar, சாம்பார்
Prep Time 15 minutesmins
Cook Time 30 minutesmins
Servings 4
Ingredients
சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள்.
4 to 5சிவப்பு மிளகாய்
1டேபிள் ஸ்பூன்கடலை பருப்பு
1டேபிள் ஸ்பூன்உளுத்தம் பருப்பு
1டேபிள் ஸ்பூன்வரமல்லி
½டேபிள் ஸ்பூன்வெந்தயம்
½டேபிள் ஸ்பூன்சீரகம்
சாம்பார் செய்வதற்கு தேவையான பொருட்கள்.
1கப் துவரம் பருப்பு
1டேபிள் ஸ்பூன்எண்ணெய்
2டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள் தேவைக்கேற்ப
2 to 3டேபிள் ஸ்பூன்சாம்பார் பொடி
¾டேபிள் ஸ்பூன்மஞ்சள்தூள்
உப்பு தேவைக்கேற்ப
சிறிதளவு புளி
10 to 12சின்னவெங்காயம்
1தக்காளி நறுக்கியது
1முருகைக்காய் சிறிதாக நறுக்கியது
1கேரட் சிறிதாக நறுக்கியது
7 to 8பீன்ஸ் சிறிதாக நறுக்கியது
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
1டேபிள் ஸ்பூன்எண்ணெய்
½டேபிள் ஸ்பூன்கடுகு
½டேபிள் ஸ்பூன்சீரகம்
¾டேபிள் ஸ்பூன்வெந்தயம்
1 அல்லது 2டேபிள் ஸ்பூன்சிவப்பு மிளகாய்
சிறிதளவு கருவேப்பிலை
Instructions
சாம்பார் பொடி செய்வது
ஒரு கடாயில் மிதமான தீயில் 4 முதல் 5 சிவப்பு மிளகாய் , 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு ,சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
Advertisement
1 டேபிள் ஸ்பூன் வரமல்லி சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். அதனை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைக்கவும் .
பின்பு ½ டேபிள் ஸ்பூன் வெந்தயம் பொன்னிறமாக வறுக்கவும் . அதனுடன் மிதமான தீயில் ½ டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் வாசனை வரும் வரை வறுக்கவும்.
பின்பு இவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து அரைத்து பொடியாக எடுத்து வைக்கவும்.
சாம்பார் செய்வது
முதலில் 1 கப் துவரம் பருப்பு, 2 கப் அளவிற்கு
Advertisement
தண்ணீர் சேர்த்து குக்கர் அல்லது ஒரு பாத்திரத்தில் வேகவிடவும். குக்கரில் வேகவைத்தால் 2 முதல் 4 விசில் வரை விடவும். பாத்திரத்தில் வேகவைத்தால் 10 நிமிடங்கள் வேகவிடவும்.பின்பு அதனை நன்றாக மசிக்கவும். அதனை தனியாக ஒரு பத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும சின்ன வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி மற்றும் வெட்டிவைத்த காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் 1 அல்லது 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் அல்லது காரத்திற்கு ஏற்ப்ப சேர்த்து சாம்பாருக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
வேகும் வரை ஒரு சின்ன பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை சுடவைத்து அதில் புளி சிறிதளவு அதில் ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து ஊறவிடவும்.
காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் அதில் ¾ டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் ,2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் முதலில் அரைத்து வைத்த சாம்பார் பொடியை சேர்க்கவும். ¾ டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து 3 அல்லது 5 நிமிடங்கள் களித்து புளி மற்றும் மஞ்சத்தூள் சேர்த்த தண்ணிரை சிறிதளவு சேர்க்கவும்.
பின்பு அதில் முதலில் வேகவைத்து மசித்த பருப்பை சேர்க்கவும். மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கி அதனுடன் தூவி விடவும்.
தாளிப்பது.
ஓரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு ,சீரகம் ,வெந்தயம்,சிவப்பு மிளகாய் ,கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு நன்றாக கொதித்த சாம்பாரில் தாளித்ததை உடனே சேர்க்கவும் நன்றாக கலந்து விடவும்விடவும் .
இப்பழுது சுவையான சாம்பார் தயார்.
English Overview: Sambar is one of the most important dishes in south India. Sambar Recipe or Sambar Seivathu Eppadi or Sambar recipe in Tamil are a few important terms to describe this recipe in the Tamil language.