புதன் பெயர்ச்சியால் தீபாவளிக்கு முன் அதிர்ஷ்ட காற்று இந்த ராசிக்காரர்கள் பக்கம் வீசப்போகிறது!

- Advertisement -

புதன் ஒருவரது புத்திக்கும் அறிவிற்கும் ஆசானாக விளங்குகிறார் .ஒருவருடைய செயல் தெளிவாக இருப்பதற்கும் சரியாக அந்த செயலை செய்வதற்கும் காரணமாக இருப்பவர் புதன் ஆவார். ஒருவருக்கு ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றிருந்தால் அவர் ஞானியாகவும் அறிவாளியாகவும் அனைத்து செயல்களிலும் தேர்ச்சி பெற்றவறாகவும் ஒவ்வொரு செயலிலும் நிபுணராகவும் இருப்பார்கள். உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள், கவிதை எழுதுபவர்கள், கட்டுரை எழுதுபவர்கள், எடுத்து செயலை வெற்றிகரமாக முடிப்பவர்கள், அதிக நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள், எந்த ஒரு செயலையும் கண்டு வருத்தம் அடையாதவர்கள், அடுத்தடுத்து அடியை நோக்கி சென்று கொண்டிருப்பவர்கள் அனைவரும் புதனின் ஆதிக்கத்திற்கு கீழ் வருபவர்கள் ஆவார்கள். வித்யாகாரகன் என்று அழைக்கப்படும் புதன் நிபுணன் என்றும் அழைக்கப்படுகிறார்.

-விளம்பரம்-

எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனைக்கான தீர்வை சரியாக தேர்ந்தெடுப்பதற்கு ஒருவரால் முடிகிறது என்றால் அவர் புதனின் ஆதிக்கத்திற்கு கீழ் வருகிறார். அப்படிப்பட்ட புதனின் பெயர்ச்சியால் தீபாவளிக்கு முன்பு உச்ச கத்தில் இருக்கப் போகும் ராசிகள் எவை? அந்த ராசிகளுக்கு தீபாவளிக்கும் முன்பு எந்த மாதிரியான அதிர்ஷ்டங்கள் கிடைக்க இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். புதன் வித்யாகாரகனாக இருப்பதால் புத்தி கூர்மையும் அசாத்தியமான உடனடி முடிவுகளை துரிதமாகவும் அறிவாளித்தனமாகவும் எடுக்கக் கூடிய தன்மை ஒருவருக்கு புதனினால் கிடைக்கும். கிரகங்களிலேயே இளைய கிரகம் இளவரசன் என்று அழைக்கப்படுபவர் புதன் ஆவார். அனைத்து கலைகளிலும் நிபுணராக இருப்பவர். இந்த புதன் ஒருவர் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க காரணமாக இருப்பவரும் ஆதிக்கத்தை செலுத்துபவரும் புதன் தான். இப்படிப்பட்ட புதனின் பெயர்ச்சியால் அதிக அதிர்ஷ்டத்தை அள்ளி கொள்ள போகும் ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் நல்ல பெரிய பலன்களை அடைய இருக்கிறார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் நல்ல நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம், நிலம் வாங்குவதில் சுப விரயங்கள் ஆகும். நேர்மறையான எண்ணங்கள் வாழ்க்கையில் முன்னேற நல்ல வழிகளை புதன் அமைத்து கொடுப்பார்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த புதனின் சஞ்சாரம் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்க இருக்கிறது. தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் மீண்டும் துவங்கும்.
எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். செய்யும் செயல்களால் நல்ல நிதி லாபங்கள் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்வதற்கும் வழி வகைகள் கிடைக்கும். செய்யும் தொழிலில்
நல்ல லாபமும் புதிய முதலீட்டினால் நல்ல வரவும் கிடைக்க இருக்கிறது. பணவரவு அதிகரிக்கும் நீங்கள் சேமிக்கவும் துவங்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த புதனின் மாற்றம் தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்க இருக்கிறது. பண வரவை அதிகரிக்கும். நிதி பற்றாக்குறையை தீர்த்து வைக்கும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். ஒரு செயலை செய்து முடிப்பதற்கு முன்பு நன்றாக யோசித்து செயல்பட்டால் அந்த காரியம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். மன நிம்மதியும் அமைதியும் கொடுக்கும்.

-விளம்பரம்-

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த புதனின் சஞ்சாரம் அதிக அதிர்ஷ்டத்தையும் நிறைய பணவரவையும் கொடுக்க இருக்கிறது. இந்த முறை பண வரவு அதிகரிக்கும் பணத்திற்கு ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். வேலையை மாற்றம் செய்ய முயற்சி செய்பவர்களுக்கு புதிய வேலை கிடைத்து வெற்றி கிடைக்கும். புதிய வேலையின் மூலம் நல்ல வருமானமும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.