Advertisement
ஆன்மிகம்

லட்ச கணக்கில் உள்ள கடன் கூட தீர ஆடி மாதம் வளர்பிறையில் வாராகி அம்மனை நினைத்து இந்த தீபத்தை ஏற்றுங்கள்!

Advertisement

இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விலங்குபவள் வாராகி. கேட்டவருக்கு கேட்ட வரத்தை அப்படியே அள்ளித் தருபவள் அவள். கன்னிமார்களுள் ஐந்தாவதாக விளங்குபவள் தான் இந்த வாராஹி, அதனால் தான் இந்த தாயாருக்கு பஞ்சமி திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தகைய சக்தி வாய்ந்த வாராகி அம்மனை நாம் வழிபடுவதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

அது மட்டும் இன்றி நம் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் தீய சக்திகளின் தொல்லையில் இருந்தும் நம்மை காக்கும் தாயாக இந்த வாராகி துணை நிற்பார். இத்தகைய பெருமை வாய்ந்த இந்த அன்னையை நாம் எப்படி வழிபட்டால் நம்முடைய துன்பங்களிலிருந்து எளிமையாக வெளி வரலாம் என்பன பற்றிய தகவலை தான் ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

Advertisement

கடன் தீர வாராகி அன்னைக்கு ஏற்ற வேண்டிய தீபம்

இந்த தீப வழிபாட்டை நாம் கோவிலுக்கு சென்று தான் செய்ய வேண்டும் என்பது இல்லை, நமது வீட்டிலேயே செய்யலாம். மாலை ஏழு மணிக்கு வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ஏனென்றால் வராகி அம்மன் வழிபாடு என்பது அந்தி சாய்ந்த பின் செய்தால் தான் விசேஷமாக இருக்கும்.

இதற்கு வாராகி அம்மன் சிலை படம் வைத்து வழிபடுபவர்கள் அவற்றை துடைத்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து மலர் சாற்றி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். வாராகி அம்மன் படம் இல்லாதவர்கள் அவர்களை மனதால் நினைத்துக் கொண்டு அவர்களுக்கு என தனியாக

Advertisement
ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபத்தையே வாராகி அம்மன் ஆக மனதில் பாவித்து கொண்டும் வணங்கலாம்.

வெண்கடுகு தீபம்

இந்த வாராகி அம்மன் புகைப்படத்திற்கு முன்னர் ஒரு சிறிய மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிய நீல கலர் துணி

Advertisement
மூட்டையில் வெண்கடுகை முடிந்து பொட்டணமாக மாற்றி, விளக்கினுள் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். இப்படி செய்யும் வேலையில் உங்கள் வீட்டின் நான்கு மூலைகளிலும் சிறிது வெண்கடுகை தூவி விடுங்கள்.

இப்படி தீபம் ஏற்றுவதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் தீய சக்திகள், கெட்ட அதிர்வலைகள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு பணவரவை தாராளமாக ஏற்படுத்திக் கொடுக்கும். இதன் மூலம் உங்களுடைய கடனை அடைப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு பலமடங்கு பெருகும். அது மட்டுமின்றி குடும்பத்தில் இருக்கும் மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் மனக்குழப்பம் பிரச்சனை இவற்றுக்கெல்லாம் இந்த வழிபாடு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து வாராகி அம்மனை மனதார வழிபட்டு வந்தால், உங்கள் வீட்டில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வை வாழலாம்.

Advertisement
Prem Kumar

Recent Posts

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

6 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

7 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

9 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

10 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

13 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

14 மணி நேரங்கள் ago