குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் வடை. வடை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. வடைகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக மெது வடை, மசால் வடை, சாம்பார் வடை, தயிர் வடை, ரச வடை, மற்றும் கீரை வடை மிகவும் பிரபலமானவை. பொதுவாக பலரும் பல வகையான வடைகளை வழக்கமாக சுவைத்திருப்பார்கள். ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான தூதுவளை வடை. பாரம்பரிய மருத்துவ குணம் உள்ள தாவரங்களில் தூதுவளை கீரைக்கு முக்கிய இடம் உண்டு. சளி இருமல் உட்பட பல நோய்களுக்கு தீர்வளிக்கும் இந்த கீரை இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
இதில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், எலும்பகளுக்கு நன்மை அளிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பொருளாக உள்ள தூதுவளை வாதம், பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டதாக உள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் நம்மில் பலருக்கும் சளி, இருமல் தொல்லை அதிக அளவில் இருக்கும் அப்பொழுது இந்த தூதுவளையில் ஏதேனும் ஒரு உணவு செய்து சாப்பிட்டால் சளி தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
பொதுவாகவே தூதுவளை கீரையை சாப்பிடு என்று சொன்னால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அதிலும் தூதுவளைக் கீரையை எல்லாம் வேக வைத்தோ, சூப் வைத்தோ, ரசம் வைத்தோ கொடுத்தால் கட்டாயம் குடிக்க மாட்டார்கள். தூதுவளையை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு தூதுவளையை இப்படியும் வடை செய்து கொடுக்கலாம். உடலுக்கு சத்து தரக்கூடிய தூதுவளை கீரை வடையை எப்படி சுலபமான முறையில் செய்வதென்று பார்க்கலாம்.
தூதுவளை வடை | Thoothuvalai Vadai Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 100 கி தூதுவளை
- 1 கப் பச்சரிசி
- 1/4 கப் இட்லி அரிசி
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் தூதுவளை கீரையின் முல்லை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
- பச்சரிசி மற்றும் இட்லி அரிசியை நன்கு அலசி தண்ணீர் விட்டு குறைந்தது 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி சேர்த்து,;அதனுடன் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு நாம் சுத்தம் செய்து வைத்துள்ள தூதுவளைக் கீரை, உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மாவை உளுந்த வடையை போல் தட்டி எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.
- அவ்வளவுதான் மழைக்காலத்திற்கு ஏற்ற மருத்துவ குணம் நிறைந்த மற்றும் சளியை விரட்டும் தூதுவளை வடை தயார். இந்த வடையுடன் பருப்பு பொடி சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Nutrition
இதனௌயும் படியுங்கள் : உரலில் இடித்த ஆட்டுக்கறி வடை இப்படி சுட்டுப் பாருங்க! இந்த டேஸ்டை வாழ்க்கைல மறக்கவே மாட்டீங்க!