நம் வீட்டில் இருக்கும் சந்தோசம், கஷ்டம், மகிழ்ச்சி, துன்பங்கள், அனைத்தையும் நிர்ணயிப்பதில் அதிகளவு பங்களிப்பு நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளுக்கும் நேர்மறை சக்திகளுக்கும் உண்டு அதாவது நல்ல சக்தியும், கெட்ட சக்தியும். உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகபடியாக நிறைந்து இருக்கிறது என்றால் உங்கள் வீட்டில் சந்தோசம், மகிழ்ச்சி மற்றும் செல்வங்கள் செழிப்புடன் நிரம்பி வழியும். அதற்கு மாறாக உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக நிறைந்து இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு நடக்கும் கஷ்டங்கள் துன்பங்கள். அதாவது விபத்துக்கள், எந்த காரியங்கள் செய்தாலும் தடை ஏற்படுதல், சுப காரியங்களுக்கு தடை இது போன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.
இதனால் உங்கள் வீட்டில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போது உங்களுக்கே உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாக நிறைந்து இருக்கிறது என்ற சந்தேகம் வரும் பொழுது இது போல செய்து பாருங்கள். நீங்கள் இப்படி செய்யும் பொழுது உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் உள்ளதா ? எதிர்மறை ஆற்றல் உள்ளதா ? என்பதனை நீங்கள் எளிதில் கண்டுபிடித்து விடலாம். அதற்கு உங்களுக்கு தேவையானது எல்லாம் ஒரு கண்ணாடி டம்பளரும். அதனுடன் சிறிது தூய்மையான நீர் தான்.
இதை செய்வதற்கு முதலில் பார்ப்பதற்கு தெளிவாக தெரியும் படியான ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கண்ணாடி டம்ளரில் எந்தவிதமான கீறல்களோ, விரிசல்களோ இருக்க கூடாது.
இப்படி நாம் எடுத்துக் கொண்ட கண்ணாடி டம்பளரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் மூன்றில் ஒரு பங்கு அளவு உப்பு சேர்த்து நிரப்பிக் கொள்ளுங்கள.
பின் இதனுடன் இதில் உயர்தர
அப்பில் சீடர் வெள்ளை அனாகரியை மூன்றில் இரண்டு பங்கு அளவு நிரப்பி கொள்ளுங்கள்.இந்த கண்ணாடி டம்ளரை உங்கள் வீட்டில் நீங்கள் எதிர்மறை ஆற்றல் எங்கு அதிகமாக உள்ளது என்று நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் வைத்து விடுங்கள்.
24 மணி நேரங்கள் அந்த கண்ணாடி டம்ளரை நகர்த்தாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்
பின்பு இந்த கண்ணாடி டம்ளரில் எதுவும் மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கா என்பதை பாருங்கள். மாற்றங்கள் எதுவும் இல்லை அப்படியே இருக்கிறது என்றால் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் இல்லை என்று அர்த்தம்.
ஆனால் அந்த தண்ணீர் பச்சை நிறமாகவும் அல்லது வேறொரு கலங்கல் நிறமாகவும் மாறினாள். உங்களது வீட்டில் எதிர்மறை ஆற்றல் சக்தி நிறைந்திருக்கிறது என்று அர்த்தம்
மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…
கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…
தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…
மேஷம் இன்று அதிகம் சாப்பிடாதீர்கள். பொருளாதாரப் பக்கம் வலுப்பெற வாய்ப்புள்ளது. இன்று வீடு பராமரிப்பு அல்லது மாற்றம் தொடர்பான திட்டங்களை…
கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…
மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…