Advertisement
ஆன்மிகம்

வீட்டின் முன் நாய் ஊளையிட்டால் அது மரணததின் அறிகுறியா ?

Advertisement

நம் தமிழகத்தில் மதம் சார்ந்த பல நம்பிக்கைகள் இன்றளவும் பலரால் நம்பப்பட்டு வருகிறது. அதை ஒருவர் மூடநம்பிக்கை என்பார், ஒருவர் அது கடவுள் சார்ந்த விஷயம் என்பார், ஒரு சிலர் தான் அதன் பின் இருப்பது அறிவியல் என்று கூறுவார்கள். இப்படி நாம் தமிழகத்தில் பரவி கிடக்கும் பல மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று ஆம், இரவு நேரத்தில் பைரவரின் வாகனமான நாய் ஒருவர் வீட்டு முன்பு நின்று ஊளையிட்டால் அந்த வீட்டில் இருப்பவர்களே யாரோ ஒருவர் மரணம் ஆகி விடுவார் என்ற நம்பிக்கையை இன்றளவும் உள்ளது. அதனால் இன்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் இது உண்மையா இல்லையா என்பதை பற்றிதான் காணப் போகிறோம்.

வீட்டின் முன்பு நாய் ஊளையிடுவதால் மரணம் நடக்குமா, நடக்காதா, என்பதை தாண்டி நம் தமிழகத்தில் இருக்கும் மக்கள் அதை ஒரு மிகப்பெரிய கெட்ட சகுனமாக இன்றளவும் கருதுகின்றனர். ஆனால் இரவு நேரங்களில் நாய்கள் குரைப்பதும், ஊளையிடுவதும் இயற்கையான ஒரு விஷயம் தான். ஆனால்

Advertisement
இரவு நேரங்களில் நாய்கள் ஊளை இடுவது குறித்து அறிவியல் என்ன சொல்கிறது என்றால் மனிதர்களிடம் பாசமாக இருக்கும் நாய்கள் இரவு நேரங்களில் மனிதர்கள் அனைவரும் தூங்க சென்று விட்ட பின் தனிமையை
Advertisement
உணரும் பட்சத்தில் தன் அழுகையின் காரணமாக ஊளை விடுகிறது என்று கூறுகிறது அறிவியல்.
Advertisement

அதனால் அந்த தனிமையின் காரணமாக நாய்கள் நம்மளை ஈர்ப்பதற்காகவும், நம் கவனத்தை அதன் பக்கம் திருப்புவதற்காகவும் இரவு நேரங்களில் ஊளை இடுகிறதாம். இது போன்ற நாய்கள் தனிமையில் ஊளையிடும் போது அதன் அருகில் நின்று சிறிது நேரம் பேசிவிட்டு வந்தால் அது ஊளையிடுவதை நிறுத்தி விடும் என்பதையும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதனால் இனி இரவு நேரங்களில் நாய்கள் ஊளையிடும் பொழுது அதை கண்டு பயம் கொள்ளாமல் நிம்மதியாக தூங்குங்கள் வேற யாரும் உங்களிடம் இதைப் பற்றி கேட்கும் பொழுதும் தெளிவான இந்த காரணத்தையும் அவர்களிடம் கூறி புரிய வையுங்கள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

4 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

7 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

17 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago