முன்பெல்லாம் வீட்டில் விருந்தாளி வந்தால் அல்லது விசேஷம் என்றால் சாம்பார், வடை, பாயாசம், கூட்டு, பொரியல், ரசம் என சமையல் இப்படித்தான் போகும். இப்போதெல்லாம் அப்படி வகை வகையான சமையல் கிடையாது. அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் பிரியாணி அசைவம் சாப்பிடாதவர்கள் வெஜிடேபிள் பிரியாணி, புலாவ், இப்படியான உணவுகளை தான் பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
அதில் இந்த வெஜிடபிள் பிரியாணி ஆகட்டும் இல்லை மற்ற பிரியாணி ஆகட்டும், என்ன தான் நாம் வீட்டில் சமைத்தாலும் கூட ஹோட்டலில் சாப்பிடும் ருசி கிடைப்பதில்லை என்று கடைசியாக ஒரே வார்த்தையில் சொல்லி விடுவார்கள். நாம் கஷ்டப்பட்டு செய்த அனைத்தும் வீணாகி போய்விடும். அந்த ஹோட்டல் ருசியில் வெஜிடபிள் ரைஸ் முட்டை சேர்த்து கூடுதல் சுவையுடன் எப்படி செய்வது என்று தான் இப்போது இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றை வைத்துதான் பிரியாணி செய்வதுண்டு. அதிலும் கோழிக்கறி பிரியாணியை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுகிறார்கள். ஆனால் இவை இரண்டும் இல்லாமல் வெறும் முட்டையை வைத்தும் வெஜிடபிள் ரைஸ் சுவையாக செய்து முடிக்கலாம். இதனை நினைக்கும் நேரத்தில் எல்லாம் அடிக்கடி செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த மழை காலத்தில் சட்டென செய்து சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள். மிகவும் அற்புதமாக இருக்கும். கமகம மணத்துடன் காரசாரமான சுவை நாவில் பட்டவுடனே எச்சில் ஊர ஆரம்பித்து விடும். வாருங்கள் இதனை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…
பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…
புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…
கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…
பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…
கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…