வயிற்றில் புண் வந்து விட்டால் ஒருவர் வாழ்வில் அனைத்து பிரச்சினைகளும் வந்துவிடும். அல்சர் , வாய்புண் இவைகள் மிகவும் பெரிய தொல்லையாக கருதப்படும். உணவு சாப்பிட்ட சிரமப் பட வேண்டும். எதை சாப்பிட்டாலும் எரிச்சல் சேர்த்து வந்துவிடும் உடலில் ஆரோக்கியத்திற்கு அத்தனை துன்பங்களையும் இந்த வாய் புண் , அல்சர் பிரச்சனை கொடுக்கும். நீர் அருந்தினால் கூட வாயில் எரிச்சல் என அனைத்தும் இந்த பிரச்சினையால் வரும். இப்படி இந்த வாய் புண் பிரச்சனை இருந்து விடுவதற்கு மிகவும் எளிமையான ஒரு மூலிகையில் சூப் செய்து சாப்பிட இருக்கிறோம்.
இந்த மூலிகை நம் வீட்டுக்கு அருகிலேயே கிடைக்கும் ஒரு மூலிகை கிராமப்புறங்களில் என்றால் வீட்டு தோட்டங்களில் கிடைக்கும் இதுவே நகர்ப்புறங்கள் என்றால் கீரை கடைகளில் வாங்கிவிடலாம். அப்படி என்ன மூலிகை பற்றி சொல்கிறேன் என்று யோசிக்கிறீர்களா ?அதுதான் மணி மணியான மணத்தக்காளி கீரை. இந்த மணத்தக்காளி கீரைக்கு அநேக நன்மைகள் உண்டு இந்த மணத்தக்காளி குணப்படுத்தும் மிக மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் வாய் முதல் வயிறில் உள்ள புண்களுக்கு தீர்வு கொடுக்கும். தொண்டை புண் எரிச்சல் வயிற்றில் வலி போன்றவற்றை குறைக்கும். ஜீரணத்தை தூண்டும். இந்த மணத்தக்காளி கீரையை வெறும் வயிற்றில் அப்படியே சாப்பிட்டாலே செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கிவிடும்.
இப்படிப்பட்ட மணத்தக்காளி நாம் , மணத்தக்காளி கீரை கூட்டு , சாம்பார் செய்து சாப்பிட்டு இருப்போம். இப்பொழுது நாம் மணத்தக்காளி கீரை சூப் செய்து சாப்பிட இருக்கிறோம். இந்த மணத்தக்காளி கீரை சூப்பை செய்து உண்டு வாய் புண், தொண்டை புண், அல்சர், உடல் சூடு இவற்றில் இருந்தும் விடுதலை பெறுவது எப்படி என்று பார்ப்போம். இந்த மணத்தக்காளி சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…
மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…