கீரையின் பயன்கள் பற்றி நமக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. கண் பார்வைக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது கீரைதான். மிக எளிதாக நம் வீட்டுப் பக்கத்தில், காய்கறிக் கடையில் அல்லது வீட்டுத் தோட்டத்தில் கீரையைப் பெற முடியும். கீரை உணவுகள் சத்தானது மட்டுமல்ல, டேஸ்டானதும் கூட. கீரையை கூட்டாகவோ, ரசமாகவோ செய்து பயன்படுத்த முடியும். அதேபோல கீரை சாதமாகவும் செய்து சாப்பிடலாம். கீரை சாதம் அல்லது க்ரீன் ரைஸ் என்றதுமே, பலரும் புதினா சாதம், கறிவேப்பிலை சாதம் அல்லது வெந்தயக்கீரை சாதம் செய்துவிடுவார்கள்.
இந்த மூன்றைவிட முடக்கத்தான் கீரையின் ருசி, குழந்தைகளின் நாவுக்கு ரொம்ப பிடிக்கும். தவிர, முடக்கத்தான் கீரை குடலுக்கும், இதயத்துக்கும் நல்லது. வாரம் இரண்டு நாள் கீரை சாதம் சாப்பிட்டால், வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நல்லதுதான். முடக்கத்தான் கீரையில் இருக்கும் சுண்ணாம்புச்சத்து மற்றும் இரும்புச்சத்து பெண்களுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை நல்கும்.
மேலும் இதில் இருக்கும் புரத சத்து, நீர் சத்து, கொழுப்பு சத்து, மாவு சத்து போன்ற அனைத்து சத்துக்களும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானவை. தினமும் ஒவ்வொரு கீரை வகையை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய்களுக்கு குட் பை சொல்லலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கீரைகள் சேர்த்த சாதமாக செய்து கொடுத்தால் சப்பு கொட்டி சாப்பிடுவார்கள். அந்த வகையில் முடக்கத்தான் கீரை சாதம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…
எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…
ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு…
பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…
மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…