பொதுவாக நாம் அனைவரும் தூங்கும் பொழுது நமக்கு கனவு வரும். அந்த கனவுகள் ஒரு சில நேரம் நமக்கு ஞாபகத்திலும் இருக்கும் ஒரு சில நேரத்தில் நாம் மறந்தும் விடுவோம். அதில் சில கனவுகள் நமக்கு மிகவும் பிடித்திருக்கும் சில கனவுகள் நமக்கு பயத்தை ஏற்படுத்தி நம் தூக்கத்தையும் கிடைக்கும். நாமும் இந்த கனவின் அர்த்தம் என்ன என்பதை பற்றி பலமுறை யோசித்து இருப்போம்.
அந்த வகையில் நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு என்று பெரியவர்கள் சொல்வார்கள். பொதுவாக கனவு என்பது இறந்த காலம் மற்றும் எதிர்காலத்தில் நடந்தவைகளையும் நடக்கப் போவதையும் பற்றி நமக்கு வரும் என்று நிபுணர்கள் சொல்வார்கள். அந்த வகையில் நம் கனவில் சிவபெருமான் வந்தால் அதற்கு அர்த்தம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
நம் கனவில் சிவபெருமானின் சூலாயுதத்தை கண்டால் அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. நமக்கு பிற்காலத்தில் வரப் போகின்ற பிரச்சனைகள் கஷ்டங்கள் என அனைத்தும் நீங்கிவிடும் என்பதை நமக்கு உணர்த்துவதற்காக சிவபெருமானின் திரிசூலம் நம் கனவில் வரும் என்று சொல்வார்கள்
நம்முடைய கனவில் சிவலிங்கம் பார்ப்பது மிகவும் நல்லது. சொல்லப்போனால்
சிவலிங்கத்தை கனவில் பார்ப்பது புண்ணியமாக பார்க்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் நமக்கு செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தரப்போகிறது என்று அர்த்தம்.நம் கனவில் மாம்பழங்கள் நிறைய இருக்கின்ற மரங்களை கண்டால் அது சிவபெருமானை குறிக்கும். பிற்காலத்தில் நமக்கு
பணவரவு அதிகரித்து நம்முடைய பொருளாதார நிலை மாறும் என்பதை பற்றி குறிக்கிறது. நாம் வாழ்க்கையில் முன்னேற போவதற்கான ஒரு அர்த்தமாகவும் பார்க்கப்படுகிறதுநம் கனவில் சிவபெருமானையும் பார்வை தேவியையும் சேர்த்துக் கண்டால் அர்த்தநாரீஸ்வரரின் அருள் நமக்கு கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். திருமண வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் பிரச்சனைகள் சங்கடங்கள் என அனைத்தும் தீர போகிறது என்று அர்த்தம். பார்வதி தேவியாருக்கு நீர் அபிஷேகம் செய்வது இன்னும் நல்ல பலன்களை கொடுக்கும். பிறகு சிவன் கோவிலுக்கு சென்று தேன் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் திருமண வாழ்க்கைக்கு மிகவும் நல்லது.
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…
மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…