சாப்பிட்ட பின் எதற்காக குளிக்க கூடாது தெரியுமா ?

பொதுவாக நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்போதும் நம்மளை குளித்துவிட்டு சாப்பிட வேண்டும் என்று சிறுவயதில் இருந்து சொல்லித்தான் வளர்ப்பார்கள் அதற்கு சில அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றன. நாம் அதற்கு மாறாக சாப்பிட்டு விட்டு குளித்தோம் என்றால் அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்க

By Prem Kumar · 14/9/2022

பொதுவாக நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்போதும் நம்மளை குளித்துவிட்டு சாப்பிட வேண்டும் என்று சிறுவயதில் இருந்து சொல்லித்தான் வளர்ப்பார்கள் அதற்கு சில அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றன. நாம் அதற்கு மாறாக சாப்பிட்டு விட்டு குளித்தோம் என்றால் அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக மட்டுமே இருக்கும் ஆகையால் குளித்ததுக்கு அப்புறம் சாப்பிட வேண்டும். அது மட்டும் இல்லாமல் இப்பொழுது எல்லாம் பல நபர்கள் வேலைப்பளு காரணமாக வயிறு பசியின் போது சாப்பிட்டுவிட்டு அதன் பின் குளிப்பது இது போன்ற செயலை தான் பெரும்பாலும் செய்கிறார்கள். ஆகையால் இன்று இந்த உடல்நலம் சார்ந்த குறிப்பில் சாப்பிட்டுவிட்டு குளித்தால் அதனால் நமக்கு என்ன தீங்கு ஏற்படும் ? ஏன் சாப்பிட்டுவிட்டு குளிக்க கூடாது ? என்பதற்கான விளக்கத்தையும் இந்த தொகுப்பில் முழுவதுமாக காண்போம் வாருங்கள்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

இதற்கான காரணம்

நாம் சாப்பிட்ட உடன் நமது இரைப்பை சாப்பிட்ட உணவை செரிமானம் பார்ப்பதற்கான வேலைகள் படுவேகமாக தொடங்கிவிடும். நாம் இரைப்பையில் செரிமான வேலைகள் நடப்பதற்கு வயிற்றி ரத்த ஓட்டம் அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் இரைப்பையில் இருக்கும் செரிமான வேலைகள் படுவேகமாக நடப்பதற்கு உதவியாக இருக்கும்.

ஆனால் நாம் சாப்பிட்டுவிட்டு குளித்தால் நம் குளிப்பதன் மூலம் நம் உடல் குளிர்ச்சியாக ஆகிறது. இதனால் நம் இரைப்பையில் நடக்கும் செரிமான வேலை பாதிக்கும் நமது இரைப்பை வயிற்று பகுதியில் ரத்த ஓட்டம் தடைபடும். ஆகையால் தான் குளித்துவிட்டு சாப்பிட வேண்டும் என்கிறார்கள் மேலும் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே குளித்திருந்தால் அது சரியாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

உடலுக்கு ஏற்ப்படும் தீங்கு

நாம் இப்படியே தொடர்ந்து சாப்பிட்ட பிறகு குளித்துக் கொண்டே இருந்தால் அது நமக்கு உடல் ரீதியான பிரச்சனையை ஏற்படுத்தும். முக்கியமாக குமட்டல் வாந்தி போன்ற குடல், இரைப்பை சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் சாப்பிட்ட பிறகு குளித்தால் உடல் பருமன் அதிகரித்துக் கொண்டு போகும். நாம் குளிக்கும் போது நம் உடலில் ஒரு மாற்றம் உண்டாகும் நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்களும் புத்துணர்ச்சியாக இருக்கும் உணர்வு அளிக்கும். இதன் காரணமாக முளைக்கும் பசி உணர்வை தூண்டுமாறு உணர்வுகளை கடத்தும் ஆகையால். சாப்பிட்ட பின்பு ஒரு மணி நேரமாவது கழித்து தான் நாம் குளிக்க
வேண்டும்.

சூடான நீரில் குளித்தால்

நீங்கள் சூடான நீரில் குளித்தால் அது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை மேலும் தூண்டும் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களையும் தளர்த்து நம் உடலுக்கு பலவிதத்தில் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி நாம் வெந்நீரில் குளிப்பதற்கு ஹைபர்தெர்மிக் என்ற பெயர் வைத்து சொல்கிறார்கள். மேலும் வென்னீரில் குளிப்பதால் நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதாகவும் செயல்படுகிறதாம்.

Recipes AMP · Quick view
View full