Advertisement
சைவம்

சவையான கோவில் அன்னதான சாம்பார் சாதம் செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் காலை உணவாக சாப்பிடுவதற்கு ஒரு அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக நம் வீட்டில் செய்யும் உணவு பொருள்களை நம் பிரசாதமாக செய்து கொடுப்பார்கள் ஆனால் நாம் செய்யும் உணவிற்கும் அவர்கள் செய்யும் பிரசாதத்திற்கும் இடையிலான சுவை வித்தியாசம் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் கோவில்களில் அன்னதானத்தில் சாம்பார் சாதம் பரிமாறப்படும். அந்த சாம்பார் சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு

இதையும் படியுங்கள் : கோவில் ஸ்டைல் சுண்டல் செய்வது எப்படி ?

Advertisement

அதன் சுவை பற்றி கண்டிப்பாக தெரிந்து இருக்கும். ஆகையால் என்று நாம் கோவில் அன்னதான சாம்பார் சாதம் எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்க போகிறோம். இதுபோல் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அற்புதமாக இருக்கும் அதனால் இன்று இந்த கோவில் அன்னதான சாம்பார் சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

கோவில் அன்னதான சாம்பார் சாதம் |Kovil Annathana Sambar Sadam Recipe in Tamil

Print Recipe
நாம் செய்யும் உணவிற்கும் அவர்கள் செய்யும் பிரசாதத்திற்கும் இடையிலான சுவை வித்தியாசம் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் கோவில்களில் அன்னதானத்தில் சாம்பார் சாதம் பரிமாறப்படும். அந்த சாம்பார் சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு அதன் சுவை பற்றி கண்டிப்பாக தெரிந்து இருக்கும். ஆகையால் என்று நாம் கோவில் அன்னதான சாம்பார் சாதம் எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்க போகிறோம். இதுபோல் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Sambar Sadam, சாம்பார் சாதம்
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Total Time 40 minutes
Servings 4 4
Calories 328.1

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்

Ingredients

சாம்பார் பொடி அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் வரமல்லி            
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகு                 
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்                      
  • 4 சிவப்பு மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவியது

சாம்பார் சாதம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

Advertisement
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 12 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 12 டேபிள் ஸ்பூன் பெருங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 12 சின்ன வெங்காயம்
  • 2 கேரட் சிறிதாக நறுக்கியது
  • 8 பீன்ஸ் சிறிதாக நறுக்கியது
  • 2 தக்காளி சிறிதாக நறுக்கியது
  • 2 கத்திரிக்காய் சிறிதாக நறுக்கியது
  • 1 முருங்கைக்காய் சிறிதாக நறுக்கியது
  • 2 உருளை கிழங்கு சிறிதாக நறுக்கியது
  • 14 கப் பச்சைபட்டாணி
  • புலிதண்ணீர் சிறிதளவு

தாளிப்பதற்கு தேவையன:

  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 10 டேபிள் ஸ்பூன் முந்திரி
  • 12 டேபிள் ஸ்பூன் கடுகு   
  • 14 டேபிள் ஸ்பூன் வெந்தயம்  
  • 3 சிவப்பு மிளகாய்
  • கருவேப்பிலை சிறிதளவு

Instructions

  • முதலில்  34 கப் அரிசி, 12 கப் துவரம் பருப்பு,இரண்டையும் நன்றாக கழுவி குக்கரில் சேர்த்து வழக்கமாக தண்ணீர் சேர்ப்பதை விட 4 கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் 4 விசில் வரும் வரை விடவும்.

சாம்பார் பொடி செய்வது.

  • ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்
    Advertisement
  • எண்ணெய் சூடானதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் மல்லி, 2 டேபிள் ஸ்பூன் மிளகு, 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் சோம்பு, 1 டேபிள் ஸ்பூன் சீரகம், 4 சிவப்பு மிளகாய், சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். 
  • பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன்  துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து அதை மிக்சியில் சேர்த்து அரைக்கவும். 
  • அரைத்து அதனை தனியாக எடுத்து வைக்கவும்.

சாம்பார் செய்யும் முறை:

  • ஒரு பெரிய பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்
  • எண்ணெய் சூடானதும் அதில் 12 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள், 14 டேபிள் ஸ்பூன் பெருங்காயப்பொடி, 2 பச்சைமிளகாய், 12 சின்னவெங்காயம், சேர்த்து கிளறவும்
  • பின்பு அதில் 2 நறுக்கிய  கேரட், 2 நறுக்கிய  உருளைக்கிழங்கு, 8 நறுக்கிய பீன்ஸ்,2 நறுக்கிய கத்திரிக்காய், 1 முருகைக்காய் சிறிதாக நறுக்கியது, 2 நறுக்கிய தக்காளி, பச்சை பட்டாணி 14 கப் சேர்க்கவும்
  • பின்பு அதில் நாம் அரைத்த சாம்பார் பொடி சேர்த்து கலந்து காய்கறிகள் வேகுறளவிற்கு தண்ணீர் சேர்த்து கூடவே தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து காய்கறிகளை நன்றாக வேகவிடவும்
  • காய்கறிகள் வெந்த பிறகு புளி தண்ணீர் சிறிதளவு சேர்த்து  அளவிற்கு தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்
  • பின்பு வேகவைத்த அரிசி மற்றும் பருப்பை அதில்  சேர்த்து அதை 5 நிமிடம் வேகவிடவும்.

தாளிப்பது.

  • ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து, அதில் 10 முந்திரியை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • அதே நெயில் 12 டேபிள் ஸ்பூன் கடுகு, 14 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 3 சிவப்பு மிளகாய், கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து தாளிக்கவும்
  • பிறகு வேகவைத்த சாம்பார் சாதத்தில் தாளித்ததை சேர்த்து கிளறவும்
  • இப்பொழுது சுவையான சாம்பார் சாதம் தயார்.

Nutrition

Serving: 800gram | Calories: 328.1kcal | Carbohydrates: 78g | Protein: 13g | Fat: 2g | Cholesterol: 8mg | Sodium: 6mg | Potassium: 462mg | Fiber: 6.89g | Sugar: 2.7g | Vitamin A: 10IU | Vitamin C: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

8 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

8 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

9 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

12 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

12 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

14 மணி நேரங்கள் ago