இன்று நாம் காலை உணவாக சாப்பிடுவதற்கு ஒரு அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக நம் வீட்டில் செய்யும் உணவு பொருள்களை நம் பிரசாதமாக செய்து கொடுப்பார்கள் ஆனால் நாம் செய்யும் உணவிற்கும் அவர்கள் செய்யும் பிரசாதத்திற்கும் இடையிலான சுவை வித்தியாசம் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் கோவில்களில் அன்னதானத்தில் சாம்பார் சாதம் பரிமாறப்படும். அந்த சாம்பார் சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு
அதன் சுவை பற்றி கண்டிப்பாக தெரிந்து இருக்கும். ஆகையால் என்று நாம் கோவில் அன்னதான சாம்பார் சாதம் எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்க போகிறோம். இதுபோல் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அற்புதமாக இருக்கும் அதனால் இன்று இந்த கோவில் அன்னதான சாம்பார் சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்
கோவில் அன்னதான சாம்பார் சாதம் |Kovil Annathana Sambar Sadam Recipe in Tamil
நாம் செய்யும் உணவிற்கும் அவர்கள் செய்யும் பிரசாதத்திற்கும் இடையிலான சுவை வித்தியாசம் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் கோவில்களில் அன்னதானத்தில் சாம்பார் சாதம் பரிமாறப்படும். அந்த சாம்பார் சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு அதன் சுவை பற்றி கண்டிப்பாக தெரிந்து இருக்கும். ஆகையால் என்று நாம் கோவில் அன்னதான சாம்பார் சாதம் எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்க போகிறோம். இதுபோல் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Sambar Sadam, சாம்பார் சாதம்
Prep Time 10 minutesmins
Cook Time 30 minutesmins
Total Time 40 minutesmins
Servings 44
Calories 328.1
Equipment
1 கடாய்
1 மிக்ஸி
1 குக்கர்
Ingredients
சாம்பார் பொடி அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:
2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1டேபிள் ஸ்பூன்கடலைப்பருப்பு
1டேபிள் ஸ்பூன்வரமல்லி
2டேபிள் ஸ்பூன்மிளகு
1டேபிள் ஸ்பூன்உளுத்தம் பருப்பு
1டேபிள் ஸ்பூன்சோம்பு
1டேபிள் ஸ்பூன்சீரகம்
4சிவப்பு மிளகாய்
2டேபிள் ஸ்பூன்தேங்காய் துருவியது
சாம்பார் சாதம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
Advertisement
2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
12டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள்
12டேபிள் ஸ்பூன்பெருங்காயம்
2பச்சை மிளகாய்
12சின்ன வெங்காயம்
2கேரட்சிறிதாக நறுக்கியது
8பீன்ஸ்சிறிதாக நறுக்கியது
2தக்காளிசிறிதாக நறுக்கியது
2கத்திரிக்காய்சிறிதாக நறுக்கியது
1முருங்கைக்காய்சிறிதாக நறுக்கியது
2உருளை கிழங்குசிறிதாக நறுக்கியது
14கப் பச்சைபட்டாணி
புலிதண்ணீர்சிறிதளவு
தாளிப்பதற்கு தேவையன:
2டேபிள் ஸ்பூன் நெய்
10டேபிள் ஸ்பூன் முந்திரி
12டேபிள் ஸ்பூன்கடுகு
14டேபிள் ஸ்பூன்வெந்தயம்
3சிவப்பு மிளகாய்
கருவேப்பிலைசிறிதளவு
Instructions
முதலில் 34 கப் அரிசி, 12 கப் துவரம் பருப்பு,இரண்டையும் நன்றாக கழுவி குக்கரில் சேர்த்து வழக்கமாக தண்ணீர் சேர்ப்பதை விட 4 கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் 4 விசில் வரும் வரை விடவும்.
சாம்பார் பொடி செய்வது.
ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்
Advertisement
எண்ணெய் சூடானதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் மல்லி, 2 டேபிள் ஸ்பூன் மிளகு, 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் சோம்பு, 1 டேபிள் ஸ்பூன் சீரகம், 4 சிவப்பு மிளகாய், சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து அதை மிக்சியில் சேர்த்து அரைக்கவும்.
அரைத்து அதனை தனியாக எடுத்து வைக்கவும்.
சாம்பார் செய்யும் முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்
எண்ணெய் சூடானதும் அதில் 12 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள், 14 டேபிள் ஸ்பூன் பெருங்காயப்பொடி, 2 பச்சைமிளகாய், 12 சின்னவெங்காயம், சேர்த்து கிளறவும்
பின்பு அதில் 2 நறுக்கிய கேரட், 2 நறுக்கிய உருளைக்கிழங்கு, 8 நறுக்கிய பீன்ஸ்,2 நறுக்கிய கத்திரிக்காய், 1 முருகைக்காய் சிறிதாக நறுக்கியது, 2 நறுக்கிய தக்காளி, பச்சை பட்டாணி 14 கப் சேர்க்கவும்
பின்பு அதில் நாம் அரைத்த சாம்பார் பொடி சேர்த்து கலந்து காய்கறிகள் வேகுறளவிற்கு தண்ணீர் சேர்த்து கூடவே தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து காய்கறிகளை நன்றாக வேகவிடவும்
காய்கறிகள் வெந்த பிறகு புளி தண்ணீர் சிறிதளவு சேர்த்து அளவிற்கு தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்
பின்பு வேகவைத்த அரிசி மற்றும் பருப்பை அதில் சேர்த்து அதை 5 நிமிடம் வேகவிடவும்.
தாளிப்பது.
ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து, அதில் 10 முந்திரியை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே நெயில் 12 டேபிள் ஸ்பூன் கடுகு, 14 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 3 சிவப்பு மிளகாய், கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து தாளிக்கவும்
பிறகு வேகவைத்த சாம்பார் சாதத்தில் தாளித்ததை சேர்த்து கிளறவும்