Advertisement
ஆன்மிகம்

அதிக பணமும், செல்வமும் வீடு தேடி வர மணி பிளாண்ட் செடியை இப்படி வளருங்கள்!

Advertisement

நம்மில் பெரும்பாலானவர் வீட்டில் அழகுக்காக வைக்கப்பட்டிருக்கும் செடி கொடிகளுடன் கண்டிப்பான முறையில் நமது வீட்டிற்கு பண வரவை அதிகரித்து, செல்வத்தை பெருக்கி, அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் வீட்டில் வந்து கொட்டச் செய்யும் மணி பிளாண்டையும் சேர்த்துதான் வீட்டில் வளர்ப்பார்கள். பெரும்பாலான செடிகளை நாம் வளர்க்கும் போது அதையும் நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் போல பராமரித்து வர வேண்டும் ஆனால் நாம் வீட்டிற்கு சகல ஐஸ்வர்யங்களையும் கொண்டு வரும் இந்த மணி பிளான்டை பராமரிப்பது என்பது மிகவும் எளிமையான வேலை.

இதை அதிக கவனம் எடுத்து பராமரிக்க வேண்டும் என்ற அவசியமும் இருக்காது சாதாரணமாக ஒரு மிட்டாய் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் மணி பிளாண்டின் ஒரு பகுதியை வைத்தால் கூட அது தளுத்து வேர் விட்டு கொடி போல அந்த இடத்திலேயே வளர்ந்து நம் வீட்டிற்கு அழகையும் தரும் சகல செல்வங்களையும் அள்ளித் தரும். இப்படிப்பட்ட மணி பிளாண்ட் செடியை வளர்க்க ஒரு சில வேலைகளை நாம் பார்த்தாலே போதும் மணி பிளான்ட் செழிப்பாக வளரும் அந்த மணி பிளான்ட் எந்த அளவிற்கு செழிப்பாக வளர்கிறதோ அந்த அளவிற்கு நம் வீடும் செழிப்பாக இருக்கும்.

Advertisement

முதலில் மணி பிளான்ட் செழிப்பாக வளர்வதற்கு, மணி பிளாண்டின் ஒரு கிளையை எடுத்து வந்து ஒரு டப்பாவில் தண்ணீர் ஊற்றி அதில் வைத்து வளர்க்க வேண்டும், தண்ணீரில் தளுத்து வேர் விட்டு வளர்ந்து வந்த பின்பு அந்த மணி பிளாண்டை நாம் ஏற்கனவே மண்ணை நிரப்பி வைத்திருக்கும் தொட்டியில் நட்டு வைக்கலாம். இப்படி நாம் நட்டு வைக்கும் மணி பிளாண்ட் செடிக்கு தண்ணீர் மிகவும் அவசியமானதாகும். அதுக்காக அளவுக்கு அதிகமான தண்ணீரையும் இந்த மணி பிளாண்ட் செடிக்கு நம் ஊற்றக்கூடாது. நாம் மணி பிளாண்ட் நட்டு வைத்திருக்கும் மண் வறட்சி அடையாத அளவிற்கு தினமும் இரண்டு முறை தண்ணீர் ஊற்றி வந்தால போதுமானதாக இருக்கும்.

Advertisement

இப்படி நீங்கள் வைக்கும் மணி பிளான்ட் சூரிய வெளிச்சம் படும்படியாக வைத்தால் மணி பிளாண்டின் கொடி மடமடன செழிப்போடு வளர்ந்து உங்கள் வீட்டை அலங்கரித்து விடும். ஆனால் அதன் வளர்ச்சி குறைவாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் சூரிய வெளிச்சம் படும் இடத்திலிருந்து சற்று தள்ளி நிழலில் இருக்கும் படி வைத்தாலே

Advertisement
போதுமானதாக இருக்கும். வீட்டிற்குள் மணி பிளான்ட் வளர்ப்பவர்கள் இதுபோன்று செய்யலாம்.

ஆனால் நம் வீட்டில் வளர்க்கும் மணி பிளாண்ட் செடி எவ்வளவு செழிப்பாக வளர்கிறதோ அவ்வளவு செல்வம் நம் வீட்டிற்கு வந்து சேரும் என்பது நம்பிக்கை. அதனால் மணி பிளான்டை வீட்டில் வளர்க்கும் போது தொட்டியில் வளர்க்கலாம் அதில் தவறில்லை ஆனால் மணி பிளான்டை வீட்டிற்கு வெளியே வளர்க்கும் போது தொட்டிகளில் வளர்ப்பதை விட நேரடியாக மணலில் நட்டு வளர்க்கும் போது அதன் வேகம் அதிகரித்து நன்கு செழிப்பாக வளரும்.

எப்படி நாம் வீட்டில் வளர்க்கும் மணி பிளான்ட் செடி ஒரு கொடி வகையை சேர்ந்தது என்பதால் மணி பிளான்ட் கொடி படர்ந்து செழிப்பாக வளர்வதற்கு ஏற்றவாறு அதன் அருகே சிறு சிறு கயிறுகளை கட்டியும் அல்லது கம்புகளை வைத்தும் அந்த கொடி பற்றி வளர்வதற்கு ஏற்றவாறு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மேலும் அப்படி வளர்ந்து வரும் மணி பிளாண்ட் செடியின் இலைகள் வாடி போகும்போது அந்த வாடிய இலைகளை உடனுக்குடன் நீக்கிவிட வேண்டும். மேலும் மணி பிளாண்ட் கொடி கிளைகள் விட்டு அதிவேகமாக வளரும்போது அதை வெட்டி சரி செய்து கொள்ளுங்கள் இப்படி நாம் மணி பிளான்ட் செடியை பார்த்து பக்குவமாக பராமரித்து வளர்க்கும் போது நமது வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகி நலமாக வாழ்வோம்.

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

2 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

5 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

15 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago