என்னதான் வீட்டில் குழம்பு வைத்து சாப்பிட்டாலும் வெளியில் சாப்பிட்டாலோ அல்லது வேறு யாரு வீட்டில் சாப்பிட்டாலும் அதனுடைய ருசியானது வேற மாறி இருக்கும் என்று தான் சொல்வார்கள். அதேபோல் நம் அனைவருக்குமே காஞ்சிபுரத்தில் செய்யும் சமையல் மிகவும் பிடிக்கும். காஞ்சிபுர மக்கள் வைக்கும் குழம்பாக இருக்கட்டும் அல்லது அங்கு செய்யும் சாதமாக இருக்கட்டும் அனைத்தும் அவ்வளவு சுவையாக இருக்கும். எவ்வளவோ வகை வகையான காய்கறிகள் இருந்தாலும், இந்த முருங்கைக்காயை அடித்துக் கொள்ள வேறு காம்பினேஷனே கிடையாது.
முருங்கை மரத்தில் உள்ள அத்தனையும் மருத்துவ குணம் மிக்கது தான். முருங்கைக்காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. முருங்கைகாய் உணவு வகைகளை சாப்பிட்டு வர சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும். வாரத்தில் குறைந்தது இரு முறை முருங்கைக்காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.
முருங்கைக்காய் சேர்த்து சாம்பார், பொரியல், கார குழம்பு இப்படி வைப்போம். இது இரண்டையும் தவிர்த்து, முருங்கைக்காயை வைத்து ஒரு மசாலா குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது முற்றிலும் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய ஒரு ரெசிபி. புரோட்டீன் சத்து நிறைந்த உணவுகளில் முருங்கைக்காய் ஒன்று. இது பலருடைய ஃபேவரெட் எனலாம். குழம்புடன் முருங்கைக்காய் சேர்த்து சமைக்கும்போது முருங்கைக்காய் வாசனை சாப்பிடும் முன்னரே நாவில் எச்சில் ஊற வைக்கும். இந்த குழம்பை சாதத்திற்கு மட்டுமன்றி இட்லி, தோசைக்குக்கும் சூப்பர் சைட் டிஷ்ஷாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : கடலைப் பொடி மட்டும் சேர்த்து முருங்கைக் கீரை இப்படி சமைத்தால் போதும்! முருங்கைக்கீரை பிடிக்காதவர்கள் கூட விருப்பி சாப்பிடுவார்கள்!
இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…
இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள் இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…
இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…
ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…
அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…
நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு…