அனைவரது வீடுகளில் அவரவருக்கென்று தனியாக அறை இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பான முறையில் பூஜை அறை வைத்திருப்பார்கள். அப்படி பூஜை அறை வைக்க வசதி இல்லாமல் இருப்பவர்கள் கூட வீட்டிலேயே ஓரிடத்தில் பூஜை செய்வதற்கென்று அவசியம் ஒர் இடத்தை ஒதுக்கி வைத்திருப்பார்கள். நீங்கள் தினமும் கோவில் செல்பவராக இருந்தாலும், கோவிலுக்கு செல்லும் முன் வீட்டில் பூஜை அறையை தயார் செய்து, வீட்டின் முத்தம் கூட்டி தெளித்து பின் வீட்டில் பூஜை முடித்துவிட்டு தான் கோவில் செல்ல வேண்டும் என சாஸ்திரங்களை கூறுகிறது. அப்படிப்பட்ட பூஜை அறையில் நாம் செய்யக்கூடாத சிறு சிறு தவறுகளை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
பூஜை அளையில் நாம் சாமிக்கு சாதத்தை பிரசாதமாக வைக்கும் பொழுது பச்சரிசியில் வடித்து தயார் செய்த சாதத்தை மட்டும் தான் பிரசாதமாக வைக்க வேண்டும் வேறு எந்த சாப்பாட்டு அரிசியையும் உபயோகிக்க கூடாது.
நாம் சாமிக்கு தேங்காய் உடைக்கும் பொழுது முதலில்
தேங்காயை சரிவர உடைத்து விட்டு அதன் பின் தான் அதன் மேல் இருக்கும் குடிமியை பிய்த்து எடுக்க வேண்டும். பின் நாம் உடைக்கும் தேங்காய் வழுக்கையாக மற்றும் கோணலாக இருந்தால் அந்த தேங்காயை பயன்படுத்தக் கூடாது. மேலும் தேங்காய் அழுகி இருக்கும் பட்சத்தில் வேறு தேங்காயை பயன்படுத்திக் கொள்ளலாம்.பூஜை அறையில் கோலம் போட்டு, விக்கிரங்களை சரியான முறையில் அமைத்து, ஊதுபத்தி ஏற்றி பின் தீபம் ஏற்றி அர்ச்சனை எல்லாம் செய்து முடித்துவிட்டு பின் தான் கடைசியாக கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.
நாம் வீட்டில் உள்ள பூஜை அறையை தயார்படுத்தி பூஜை செய்வதற்காக வைக்கும் பொருள்களில் வெற்றிலையும் வாழைப்பழமும் என இரண்டும் அடங்கும். இந்த இரண்டு பொருட்களிலும் அதன் காம்பு பகுதியோடு இருப்பது அவசியம் மேலும் நாம் வைக்கும் வெற்றிலையில் எக்காரணம் கொண்டும் சுண்ணாம்பு தடவி இருக்கக் கூடாது.
இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…
அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…
எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…
நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…
ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…
இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…