சளி பிடித்துக் கொண்டால் ஒருவர் வாழ்வில் அனைத்து பிரச்சினைகளும் வந்துவிடும். சளித்தொல்லை மிகவும் பெரிய தொல்லையாக கருதப்படும். மூச்சு விட சிரமப் படம் வேண்டும். இருமல் சேர்த்து வந்துவிடும் உடலில் ஆரோக்கியத்திற்கு அத்தனை துன்பங்களையும் இந்த சளி பிரச்சனை கொடுக்கும்.தலைவலி மூக்கடைப்பு மூச்சு விட முடியாமல் இருப்பது இருமல் நாவறட்சி என அனைத்தும் இந்த சளி பிரச்சினையால் வரும். இப்படி இந்த சளி பிரச்சனை இருந்து விடுவதற்கு மிகவும் எளிமையான ஒரு மூலிகையில் சூப் செய்து சாப்பிட இருக்கிறோம்.
தூதுவளை மூலிகை நம் வீட்டுக்கு அருகிலேயே கிடைக்கக்கூடிய ஒரு மூலிகை கிராமப்புறங்களில் என்றால் வீட்டு வேலிகளில் கிடைக்கும் இதுவே நகர்ப்புறங்கள் என்றால் கீரை கடைகளில் வாங்கிவிடலாம். அப்படி என்ன மூலிகை பற்றி சொல்கிறேன் என்று யோசிக்கிறீர்களா ?அதுதான் முட்களோடு கூடிய தூதுவளை. இந்த தூதுவளைக்கு அநேக நன்மைகள் உண்டு இந்த தூதுவளை குணப்படுத்தும் மிக மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் சளி பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும். வறட்டு இருமலை குறைக்கும். ஜீரணத்தை தூண்டும். இந்த தூதுவளையை வெறும் நெய்யில் வதக்கி சாப்பிட்டாலே சளி பிரச்சனைகளும், வறட்டு இருமல் வாயு பிரச்சனைகள் நீங்கிவிடும்.
தூதுவளையில் நாம் தூதுவளை ரசம் , தூதுவளை துவையல் சாப்பிட்டு இருப்போம். இப்பொழுது நாம் தூதுவளையை சூப் செய்து சாப்பிட இருக்கிறோம் இந்த தூதுவளை சூப்பை செய்து உண்டு சளிப் பிரச்சினைகளில் இருந்தும், நாள்பட்ட நெஞ்சு சளியில் இருந்தும், வறட்டு இருமலில் இருந்தும் விடுதலை பெறுவது எப்படி என்று பார்ப்போம். இந்த தூதுவளை ஆஸ்துமாவுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. தூதுவளை சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…