பொதுவா நிறைய பேருக்கு பருப்பு சாதத்தில் நெய் ஊத்தி சாப்பிடறதுன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும் அப்படியே கொஞ்சம் உருளைக்கிழங்கு வறுவல் முட்டை வறுவலும் வச்சு சாப்பிட்டா ரொம்ப சூப்பரான காமினேஷன் ஆக இருக்கும் ஒரு சிலருக்கு பிரியாணி கூட பிடிக்காது இந்த காம்பினேஷன் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அப்படி பருப்பு சாதம் லவ்வர்ஸ் ஆகவேதான் இப்ப நம்ம இந்த கொங்கு நாட்டு அரிசி பருப்பு சாதம் பாக்க போறோம். கொங்கு நாட்டு சைடுல எல்லாம் இந்த அரிசி பருப்பு சாதமும் உருளைக்கிழங்கு வறுவலும் கூடவே கொஞ்சம் அப்பளமும் வச்சு கொடுத்தா ஒரு சூப்பரான லஞ்ச் அது இருக்கும்.
அந்த அளவுக்கு செம டேஸ்டான ஒரு லஞ்ச் தான் இந்த அரிசி பருப்பு சாதம். நம்ம இதை குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்லயும் காலேஜ் படிக்கிறவங்களுக்கும் வேலைக்கு போறவங்களுக்கும் கூட டிபன் பாக்ஸில் வைத்து கொடுக்கலாம் அவங்க எல்லாரும் கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சிலருக்கு சாம்பார் பிடிக்கவே பிடிக்காது அவங்க எல்லாருக்கும் இந்த அரிசி பருப்பு சாதம் செஞ்சு கொடுத்தா கண்டிப்பா அவங்க இதுக்கு அடிமையாயிடுவாங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் இருக்கும்.
ஒருவேளை உங்க வீட்ல எந்த காய்கறியும் இல்ல அப்படின்னா சட்டுனு யோசிக்கவே யோசிக்காதீங்க இந்த அரிசி பருப்பு சாதம் செஞ்சுடுங்க. அரிசிக்கு ஏத்த மாதிரி கரெக்டான அளவுல பருப்பு சேர்த்து போட்டு இந்த அரிசி பருப்பு சாதம் வெச்சா அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு தடவை ட்ரை பண்ணி பார்த்தால் அதுக்கப்புறம் நீங்களே உங்க வீட்ல அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு இருக்கும் இதோட டேஸ்ட். இந்த அரிசி பருப்பு சாதத்தை சூடா ஆவி பறக்க பறக்க சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும்.இப்ப வாங்க இந்த சூப்பரான கொங்கு நாட்டு அரிசி பருப்பு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
அரிசி பருப்பு சாதம் | Arisi Paruppu Saadham Recipe In Tamil
Equipment
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1 கப் அரிசி
- 1/4 கப் பாசிப் பருப்பு
- 1/2 கப் துவரம் பருப்பு
- 1 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 டீஸ்பூன் நெய்
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 1 பச்சைமிளகாய்
- 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் சாம்பார் தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
செய்முறை
- முதலில் ஒரு கப் அரிசியுடன் பருப்பையும் சேர்த்து நன்றாக 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
- ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சீரகம் கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்
- பிறகு நறுக்கிய வெங்காயம் தக்காளி இரண்டையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு மஞ்சள் தூள் சாம்பார் தூள் சேர்த்து கலந்து விடவும் பிறகு நான்கு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்
- தண்ணீர் கொதித்ததும் அதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை கழுவி சேர்த்துக் கொள்ளவும்
- இரண்டு விசில் விட்டு விசில் அடங்கியதும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான கம கம அரிசிபருப்பு சாதம் தயார்.