- Advertisement -
மதியம் சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட அட்டகாசமான சுவையில் அவரைக்காய் புளிக்குழம்பு இனி இப்படி ஒருதரம் செய்து சுவைத்து பாருங்க. குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்வோருக்கும் இது போன்று லன்ச்க்கு குழம்பு செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.
-விளம்பரம்-
எப்படி இந்த குழம்பு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
அவரைக்காய் புளி குழம்பு | Avaraikai Pulikulambu Recipe In Tamil
மதியம் சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட அட்டகாசமான சுவையில் அவரைக்காய் புளிக்குழம்பு இனி இப்படி ஒருதரம் செய்து சுவைத்து பாருங்க. குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்வோருக்கும் இது போன்று லன்ச்க்கு குழம்பு செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.எப்படி இந்த குழம்பு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- ¼ கிலோ அவரைக்காய்
- 2 பெரிய வெங்காயம்
- 3 தக்காளி
- 2 பச்சைமிளகாய்
- 1 கொத்து மல்லித்தழை
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள்
- 1 கப் புளிக்கரைசல்
- ½ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் சோம்பு தூள்
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 டீஸ்பூன் சீரகத்தூள்
- உப்பு தேவைக்கேற்ப
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் அவரைக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும். புளியை கரைத்து வைக்கவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சிறிது ஊற்றி அவரை, தக்காளி, மஞ்சள் தூள், மிளகு தூள், சீராத்தூள், மல்லித்தழை, சேர்த்து 30 நிமிடம் வேக விடவும். பின்பு புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். சோம்பு தூள், மிளகாய் சேர்த்து தூள், கறிவேப்பிலை தாளிக்கவும். தாளித்தவற்றை அவரை குழம்பில் ஊற்றவும்.
- அவரைக்காய் புளிக்குழம்பு தயார். இதில் இறால், கருவாடு சேர்த்தால் கூடுதல் ருசி சுவையான கிடைக்கும். ஏற்ற சூடான சாதத்திற்கு மிக உணவு.