சென்னா மசாலா பொதுவாக சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். இது பஞ்சாபில் இருந்து பெறப்பட்ட சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. சென்னா மசாலா வெள்ளை கொண்டைக்கடலை, வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், மற்றும் கரம் மசாலா, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இதனை மேலும் ஆரோக்கியமாக விரும்பினால் முளைகட்டிய கொண்டைக்கடலையை பயன்படுத்திக் கொள்ளலாம். கொண்டைக்கடலை ஆரோக்கியம் நிறைந்த உணவு வகைகளில் ஒன்று. இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும்.
கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, சோடியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன. அதனால்தான் கொண்டைக்கடலையை ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டு வந்தால் நல்லது என கூறுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவு வகைகளில் பூரி, சப்பாத்தி என்றாலே பிடித்தமான ஒன்றாகும். அந்த பூரி சப்பாத்திக்கு ஆரோக்கியமான கொண்டைக்கடலையை வைத்து சென்னா பெப்பர் மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த சென்னா பெப்பர் மசாலா ஹோட்டல் சுவையில் இருப்பதால் 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் 4 சப்பாத்தி சாப்பிடுவார்கள். மேலும் இந்த சென்னா பெப்பர் மசாலாவை செய்வது மிகவும் ஈஸி.
சென்னா பெப்பர் மசாலா | Chana Pepper Masala Recipe In Tamil
Equipment
- 1 குக்கர்
- 1 மிக்ஸி
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1 கப் வெள்ளை கொண்டை கடலை
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 2 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 5 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் சீரகத்தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/2 டீஸ்பூன் சென்னா மசாலா
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் காய்ந்த மாங்காய் தூள்
- 2 டீஸ்பூன் மிளகு தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 டீஸ்பூன் சர்க்கரை
- 2 டேபிள் ஸ்பூன் நெய்
- 1 பிரியாணி இலை
- 1 டீஸ்பூன் சீரகம்
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து கொண்டைக்கடலையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து கொள்ளவும். பின் இதனை மசித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் சீரக தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மாங்காய் தூள், மஞ்சள்தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கி ஆற விடவும்.
- இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சீரகம், ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
- பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து நன்கு கலந்து அதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலை, பச்சை மிளகாய், சென்னை மசாலா, உப்பு, சக்கரை மற்றும் மிளகு தூள் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
- இவை நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான சென்னா பெப்பர் மசாலா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கொண்டைக்கடலையை வைத்து ஒரு ருசியான தோசை, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!