நான்வெஜ் அப்படின்னாலே நமக்கு ஞாபகத்துக்கு வருவது சிக்கன், மட்டன் இது ரெண்டும் தான். ஒரு சிலர் அவங்க வீட்டில அடிக்கடி சிக்கனும் மட்டன் தான் செய்வாங்க. ஒரு சிலருக்கு மீன் அப்டினா ரொம்ப பிடிக்கும். அவங்க அவங்க வீட்ல அடிக்கடி நீயும் தான் அதிகமா சமைப்பாங்க. ஆனா அசைவத்துல மருத்துவ பயன்கள் நிறைந்து இருக்க ஒன்னு தான் நண்டு.
ஒரு சிலருக்கு நண்டு சமைக்க தெரியாதுன்னு வாங்க மாட்டாங்க ஒரு சிலருக்கு நண்டு எப்படி சாப்பிடணும் அப்படின்னு தெரியாது அதனால உங்க வீட்ல வாங்க மாட்டாங்க ஆனா நண்டு இப்படி அருமையா செஞ்சா சூப்பரா இருக்கும் அப்படின்னு நீங்க கத்துக்கிட்டீங்கன்னா நண்டு சாப்பிடுவதால் நமக்கு கிடைக்க கூடிய ஆரோக்கியங்கள் பல. மழைக்காலத்தில் நிறைய பேருக்கு அதிகமா இருமல் சளி வந்துடும் அவங்க எல்லாரும் இந்த நண்டுல ரசம் வச்சு குடிச்சாலும் இல்ல குழம்பு வச்சு குடிச்சாலும் அவங்களுக்கு சீக்கிரமாகவே இருமல் சளி சரியாகிவிடும் அந்த அளவுக்கு ஒரு பவர்ஃபுல்லானது தா இந்த நண்டு.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறவங்களும் அவங்களோட உணவுல இந்த நண்டை அடிக்கடி சேர்த்துக்கலாம். கொழுப்பு ரொம்ப வெயிட் கம்மியா இருக்கிறதால உடல் எடையை குறைக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு நண்டு ரொம்பவே நல்லது. ரத்த சோகையா கம்மி பண்ணி எலும்புகளை ஆரோக்கியமா வச்சுக்க நான் தான் நம்ம அடிக்கடி சாப்பிட்டு வரலாம் முடக்கு வாதம் கூட நண்டு சாப்பிடுவதால் சரியாகும். என்னதான் நம்ம நண்டுல ரசம் வைக்கலாம் நண்டுல கூட்டு வைக்கலாம். நண்டுல ஆம்லெட் கூட போடுவாங்க.
ஆனா இட்லி, தோசை சாதம் னு எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடக்கூடிய நண்டுல வைக்கக்கூடிய செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு தான் இப்ப நம்ம பாக்க போறோம். இந்த குழம்பு ரொம்பவே அருமையா இருக்கும். இந்த குழம்ப ஒரு தடவை உங்க வீட்டுல செஞ்சு கொடுத்தா அவங்க மறுபடியும் மறுபடியும் கேட்டுட்டே இருப்பாங்க அந்த அளவுக்கு இதோட சுவை அருமையா இருக்கும். வாங்க இந்த செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு | Chettinadu Nandu Thanni Kulambu
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ நண்டு
- 20 சின்ன வெங்காயம்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 2 பட்டை
- 8 பூண்டு பற்கள்
- 2 கத்திரிக்காய்
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 2 தக்காளி
- 1/2 டீஸ்பூன் வெந்தயம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 கொத்து கருவேப்பிலை
- 1 கைப்பிடி மல்லி இலைகள்
செய்முறை
- முதலில் நண்டை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து பத்து நிமிடத்திற்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் சோம்பு பட்டை வெந்தயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- அதனுடன் பூண்டை தோல் உரிக்காமல் தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.எடுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொதிக்கின்ற குழம்பில் சேர்த்து விட வேண்டும்.
- கடைசியாக நண்டையும் சேர்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் கொதித்த பிறகு கொத்தமல்லி இலைகளை சேர்த்துஇறக்கினால் செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு சுட சுட தயார்.