புளிக்குழம்பு அல்லது கல்யாண வீடுகளில் கொடுக்கும் புளிக்குழம்பு ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த சுவையான புளிக் குழம்புக்கு அடிமையாகி போனவர்களும் உண்டு. அந்த வகையில் இப்படிப்பட்ட புளி குழம்பு எப்படி வீட்டிலேயே ரொம்ப சுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
அறுசுவைகளும் நிறைந்தது தான் நமது பாரம்பரியமான உணவு. அன்றாடம் நாம் அறுசுவையையும் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடம்பில் எந்தவித நோய்களும் ஏற்படாது என்று தான் அந்த காலத்தில் அறுசுவை உணவு என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது நாம் அதில் சில சுவைகளை அறவே சேர்ப்பதில்லை. அவற்றில் ஒன்றுதான் கசப்பு சுவை. கசப்பு சுவை நிறைந்த பொருட்கள் ஒன்று தான் கொத்தவரங்காய் . கசப்பு சுவை தெரியாமல் எப்படி கொத்தவரங்காய் வைத்து குழம்பு செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
கொத்தவரங்காய் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள நரம்புகளை வலுப்படுத்தும் சக்தி கொத்தவரங்காய்க்கு உண்டு. கொத்தவரங்காய் ஒரு வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த கொத்தவரங்காய் வைத்து எப்படி கொத்தவரங்காய் புளிக்குழம்பு செய்வது என்று பார்ப்போம்.
கொத்தவரங்காய் புளிக்குழம்பு | Cluster Beans Pulikulambu In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ கொத்தவரங்காய்
- 1 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- புளி நெல்லிக்காய்அளவு
- 1 கைப்பிடி கறிவேப்பிலை
- 1 கைப்பிடி கொத்துமல்லி தழை
- உப்பு தேவைக்கேற்ப
- நல்லெண்ணெய் தேவைக்கேற்ப
அரைக்க
- 1/2 கப் தேங்காய்
- 1/2 டீஸ்பூன் மிளகாய் பொடி
- 1/2 டீஸ்பூன் மல்லி பொடி
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி
தாளிக்க
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை
- கொத்தவரங்காயை தண்ணீரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- மிக்ஸியில் தேங்காய், மிளகாய் பொடி மல்லி பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, பின் வெங்காயம், தக்காளி, தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்
- பின்னர், அரைத்து வைத்த கலவையை ஊற்றி , கொதிக்க விடவும். வேகவைத்த காயை சேர்த்து. எண்ணெய் பிறிது வந்ததும், இறக்கிவிடவும்.
- இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்