- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
திருநெல்வேலின்னா அல்வா மட்டும்தான்னு நிறைய பேரு நினைக்கிறார்கள் ஆனால் சொதி குழம்பு கேள்விப்பட்டிருக்கீங்களா? அதுவும் திருநெல்வேலி ஸ்பெஷல் தான்! சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், அவ்வளவு சூப்பராக இருக்கும். சாதம் தவிர, இடியாப்பத்திற்கு இந்த சொதி காம்பினேஷனை அடித்துக் கொள்ள வேற ‘டிஷ்’ கிடையாது. பொதுவாக புதுமண தம்பதியர்களுக்கு திருநெல்வேலி செய்து கொடுக்கப்படும் பிரபலமான ஒரு ரெசிபி தான் சொதி. இது மிகவும் வித்தியாசமான சுவையுடன் தேங்காய் பால் மற்றும் நிறைய காய்கறிகள் சேர்த்து செய்யப்படும்.
சொல்லப்போனால் இது ஒரு ஆரோக்கியமான சமையல் என்றும் சொல்லலாம். ஏனெனில் இதில் காய்கறிகளை அதிகம் சேர்த்து செய்வதால், இதில் சத்துக்கள் அதிகம் இருக்கும். இந்த குழம்பை திருநெல்வேலிக்காரங்க மட்டுமில்லை. யாரு வேணும்னாலும் இந்த சொதியை தயார் செய்து ஒரு கை பார்க்கலாமுங்க! சுவையான தேங்காய் பால் சொதி குழம்பு செய்யும் முறையை இந்த பதிவில் பார்க்கலாம். சொதிக் குழம்பு’ திருநெல்வேலியின் பாரம்பரியமான மிகவும் பிரபலமான உணவாகும்.
இதை இடியாப்பம், இட்லி, சாதம் என அனைத்திற்கும் தொட்டு சாப்பிட்டால் ருசி அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த சொதி குழம்பு சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் முக்கியமாக இந்த சொதி குழம்பு செய்வது ரொம்பவே ஈஸி. வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சொதி குழம்பை சூடான சாதம், ஆப்பம், இடியாப்பம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சாப்பிட்டால் மிக மிக அருமையாக இருக்கும். எப்போதும் ஒரே மாதிரி குழம்பு வைத்து அலுத்து போனவர்களுக்கு, இந்த சொதி குழம்பு ஒரு அருமையான மாற்று!
இதனையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ஏற்ற நெல்லை ஸ்பெஷல் கார சட்னி இப்படி ஓரு தரம் செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் அனைத்து காய்கறிகளையும் தண்ணீரில் நன்கு அலசி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வேக விடவும்.
பின் வெங்காயம், உப்பு மற்றும் இஞ்சி சேர்த்து வேக விடவும். காய்கறிகள் நன்கு வெந்ததும் வேகவைத்துள்ள பாசி பருப்பை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.
பின் அடுப்பை குறைந்த தீயில் வைத்து மீண்டும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடாமல் இரண்டு நிமிடங்களில் அடுப்பை அணைத்து விடவும்.
பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பூண்டு, வெங்காயம் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும்.
பின் இறுதியாக குழம்பு கொஞ்சம் ஆறியதும் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பால் சொதி குழம்பு தயார்.






