பல காய்கறிகளை சேர்த்து சுவையான தேங்காய் பால் பல கறி குழம்பு செய்ய போகிறோம். தேங்காய் பால் சேர்த்து பல காய்கறிகளை போட்டு இந்த குழம்பு செய்வதால் இது மிகவும் சத்துள்ள குழம்பும் ஆரோக்கியமான குழம்பாகவும் இருக்க போகிறது. அதுவும் தேங்காய் பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப் புண், வாய் புண் , தொண்டையில் இருக்கும் புண்கள், உடல் சூடு போன்றவற்றை குறைக்க உதவும். தேங்காயில் இருக்கின்ற நல்ல கொழுப்புகள் உடலுக்கு நல்ல சக்தியை கொடுக்க இருக்கின்றன.
உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை எல்லாம் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சத்தான சுவையான தேங்காய் பால் பலக்கறி குழம்பு சாதத்திற்கும் ,சப்பாத்திக்கும், தோசைக்கும், இட்லிக்கும் தொட்டுக் கொள்ளலாம். நிறைய பேருக்கு இந்த காய்கறிகள் என்றால் பிடிக்காது ஆனால் இது போன்ற சுவையான தேங்காய் பால் குழம்பு வைத்து கொடுக்கும் பொழுது அவர்கள் விரும்பி உண்பார்கள்.
இந்த பல காய்கறி குழம்பில் காய்கறிக்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான அசைவங்களையும் கூட சேர்த்து நீங்கள் செய்யலாம். வேண்டுமென்றால் இந்த காய்கறி குழம்பில் முட்டையை உடைத்து ஊற்றி தேங்காய் பால் முட்டை குழம்பாக கூட நீங்கள் செய்து சாப்பிடலாம். ஆனால் நாம் இப்பொழுது சைவ குழம்பு வகையில் இதை வைக்க இருக்கிறோம். இந்த சைவ குழம்பு அசைவ குழம்பு சுவையில் இருக்கும். காய்கறிகள் அனைத்தும் நன்றாக தேங்காய் பாலில் வேகும் பொழுது இரண்டு சத்துக்களும் இரண்டற கலந்து உடலுக்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கும். இப்பொழுது இந்த தேங்காய் பால் பலக்கறி குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேங்காய் பால் பலகறி குழம்பு | Veg Coconut Milk Gravy
தேவையான பொருட்கள்
- 2 கத்தரிக்காய்
- 1 கேரட்
- 1 குடைமிளகாய்
- 2 உருளைக்கிழங்கு
- 1 கப் பீன்ஸ்
- 1 வாழைக்காய்
- 3 பச்சைமிளகாய்
- 5 பல் பூண்டு
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 1 மூடி தேங்காய்
- 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க
- எண்ணெய் தேவையானஅளவு
- 1 பட்டை
- 1/2 பிரியாணி இலை
- 2 கிராம்பு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1/2 ஸ்பூன் சோம்பு
- 1 ஏலக்காய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் தேங்காயை துருவி எடுத்து கொண்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி பாலை எடுத்து கொள்ளவும்.இப்படி முதலில் எடுத்து வைத்த தேங்காய் பாலை தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
- பிறகு இரண்டாவது முறை மிக்ஸி ஜாரில்சேர்த்து சிறது நீர் விட்டு அரைத்து இந்த பாலை தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
- காய்கறிகளை ஒரே மாதிரி நீளத்தில் நறுக்கி கொள்ளவும். இல்லை என்றால் ஒவ்வொன்றும் தனிதனி அளவுகளில் இருக்கும்.இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடேறியதும் அதில் பட்டை , கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் சீரகம் , சோம்பு சேர்த்து பொரிந்ததும் பொடியாகநறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பிறகு பொடியாகநறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின்பு ஒரே அளவாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிளறிவிட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- பின்பு இரண்டாவதாக அரைத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து நன்றாக கலந்துமூடி போட்டு வேக வைக்கவும்.
- அவ்வப்போது மூடியை திறந்து கிளறி விட வேண்டும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் முதலில் எடுத்து. வைத்துள்ள கெட்டியான தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- கெட்டியான தேங்காய் பால் சேர்த்து ஒரு முறை கொதித்து வந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து இறக்கினால் சூடானருசியான தேங்காய் பால் பலகறி குழம்பு தயார்.