காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருக்கும் கொத்தமல்லி வைத்து சுவையான துவையல் செய்து கொடுக்கலாம். இவை உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொத்தமல்லி சிறந்தது. கொத்தமல்லியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவுகின்றன. கொத்தமல்லி இலையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.அதுமட்டுமல்லாமல் இதனை எந்த வகை குழம்பு சாதத்துடன் வேண்டுமென்றாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட அவ்வளவு சூப்பரான சுவையில் இருக்கும்.
இந்த , கொத்தமல்லி துவையலை வாரத்திற்கு இரண்டு முறை உணவுடன் சேர்த்துக் கொண்டால், உடம்பில் ரத்த சோகை, முடி உதிர்வு பிரச்சினை இவை அனைத்தும் சரியாகிவிடும். வாருங்கள் இந்த சுவையான கருவேப்பிலை, கொத்தமல்லி துவையல் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கொத்தமல்லியை வைத்து இப்படி ஒரு தொக்கு நீங்கள் செய்து வைத்துக் கொண்டால் சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கும் திடீரென எதுவும் இல்லாத போது தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்! சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும் இந்த இன்ஸ்டன்ட் கொத்தமல்லி தொக்கு வீட்டில் எளிதாக எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
கொத்தமல்லி தொக்கு | Coriander Thokku Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கட்டு கொத்தமல்லி
- 10 வர மிளகாய்
- புளி சிறு நெல்லிக்காய் அளவு
- 10 பற்கள் பூண்டு
- உப்பு தேவையான அளவு
- 1/4 ஸ்பூன் பெருங்காயத் தூள்
- 1 கப் கடலைப் பருப்பு
- 1 கப் உளுத்தம் பருப்பு
செய்முறை
- கொத்தமல்லி தொக்கு செய்வதற்கு முதலில் தேவையானஎல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பச்சை கொத்தமல்லியை ஒரு கட்டை பிரித்துநன்கு கழுவி சுத்தம் செய்து இலை இருக்கும் பகுதி வரை காம்பை நறுக்கி எடுத்து விடுங்கள்.
- பின்னர் தண்ணீரை உதறி ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு ஸ்பூன்எண்ணெய் விட்டு காய விடுங்கள்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சைகொத்தமல்லியை போட்டு லேசாக வதக்கி விடுங்கள். மல்லி சுருள வதங்கியதும், அதை தனியாகஎடுத்து தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்
- பின்னர் அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டுவர மிளகாய் சேர்த்து உப்பி வர லேசாக வறுத்துக் கொள்ளுங்கள், கருகி விடக்கூடாது கவனமாகபார்த்துக் கொள்வது நல்லது.
- பின்னர் இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அதே எண்ணெயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துஎடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சிறு நெல்லிக்காய்அளவிற்கு புளியை விதைகள், நார்கள் எல்லாம் நீக்கி உருட்டி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள்.இதே எண்ணெயில் வதக்கி இதனுடன் தேவையான அளவிற்கு பெருங்காயத்தை கட்டியாகவோ அல்லது தூளாகவோசேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் நீங்கள் மல்லியை தவிர எண்ணெயில் வதக்கிய மற்ற எல்லா பொருட்களையும்சேர்க்க வேண்டும். கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, புளி, பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றைமிக்ஸியில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் பூண்டு பற்களையும் தோல் உரித்து சேருங்கள்.
- பின்னர் இந்த கலவைக்கு தேவையான அளவிற்கு உப்புபோட்டு தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கொரகொரவென்று பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் மல்லியையும் சேர்த்து ஒருமுறை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் இதை ஒரு வாயகன்ற தட்டில் போட்டு உலரவைத்துக் கொள்ளுங்கள். நன்கு உலர்ந்து ஈரப்பதம் இல்லாமல் ஆனதும் ஒரு பாட்டிலில் ஸ்டோர்செய்து வைத்துக் கொள்ளுங்கள்.