சாம்பார் என்றாலே பருப்பு தான் நம் நினைவுக்கு முதலில் வரும். எந்த பருப்பு வகைகளையும் சேர்க்காமல், சட்டுனு பத்து நிமிடத்தில் மணக்க மணக்க, அருமையான டிபன் சாம்பார் இப்படி செஞ்சு கொடுத்தா, இன்னும் ரெண்டு இட்லி தாராளமாக உள்ளே செல்லும். அட இட்லிக்கு இப்படி கூட பொட்டுக்கடலை அரைத்து ஊற்றி சாம்பார் வைக்கலாமா? இவ்வளவு ஈஸியா, இவ்வளவு சுவையா யாராலும் டிபன் சாம்பார் வைக்கவே முடியாது. வேற லெவல் இட்லி சாம்பார் ரெசிபி இதோ உங்களுக்காக.
பருப்பு வேகவைத்து சாம்பார் வைக்க முடியாத சமயத்தில், இப்படி ஒரு பொட்டுக்கடலை சாம்பாரை முயற்சி செய்யலாம். அல்லது பருப்பு சாம்பார் சாப்பிட்டு போர் அடிக்குது. கொஞ்சம் வித்தியாசமாக ஒரு சைடு டிஷ் செய்தால் சூப்பராக இருக்கும் என்று நினைக்கும் போதும் இந்த சாம்பார் ரெசிபி ட்ரை பண்ணலாம். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட இது சூப்பரான ஒரு சைடு டிஷ். சுலபமாக செய்யக்கூடிய சைட் டிஷ்ம் கூட. .
சுட சுட இட்லிக்கு மேல் வார்த்து சாப்பிட ஒரு டிபன் சாம்பார் வைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. சாம்பாரின் சுவை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு வீட்டில் இருப்பவர்கள் இட்லியை விருப்பமாக சாப்பிடுவார்கள். இட்லி சாம்பார் என்றாலே அது வேற லெவல் டேஸ்டில் இருக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் இட்லி செய்தால் ஒருமுறை இப்படி பொட்டுக்கடலை சாம்பார் வைத்து பாருங்கள். இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். ஒரே மாதிரி சாம்பார் வைத்து போர் அடிக்கும்போது கொஞ்சம் வித்தியாசமாக ட்ரை பண்ணலாம் என்று யோசித்தால் இந்த சாம்பார் ரெசிபியை முயற்சி செய்து பார்க்கலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பொட்டுக்கடலை சாம்பார் | Fried Gram Sambar In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் பொட்டுக்கடலை
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 2 தக்காளி
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள்
- 1/2 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
- 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சத்தூள்
- எண்ணெய் தேவைக்கேற்ப
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 கைப்பிடி கொத்தமல்லி தழை
செய்முறை
- பொட்டுக்கடலை அரை கப் எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி இதனுடன் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொஞ்சமாக நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- அதன்பிறகு அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்ததை கொதிக்கும் கலவையுடன் சேர்த்து சிறிது நேரம் கொதித்து கெட்டியானதும் இறக்கி விடவும்..
- சுவையான பொட்டுக்கடலை சாம்பார் தயார்
- இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்றது.