பொதுவாக தொக்கு என்றாலே அனைவருக்கும் வாயில் எச்சில் ஊரும். அதிலும் நெல்லிக்காய் தொக்கு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எனவே அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய நெல்லிக்காய் தொக்கு எப்படி செய்வது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். நெல்லிக்காயை கொண்டு ஜாம், தேன், நெல்லிக்காய், ஊறுகாய், நெல்லிக்காய் சாதம் என பல்வேறு வித்தியாசமான ரெசிபிகளை செய்யலாம். அதிலும் புளிப்பும் துவர்ப்பும் கலந்த நெல்லிக்காயை கொண்டு தொக்கு செய்தால் படு ஜோராக இருக்கும்.
நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம். நெல்லிக்காய் சாறுடன் தேன் எலுமிச்சம்பழச் சாறு சம அளவு கலந்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும். நெல்லிக்காயை தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர முடி உதிர்வதை தடுக்கும் மற்றும் இளநரையை மாற்றும். முடி நன்கு வளரும். நெல்லிக்காயில் பலவிதமான மருத்து குணங்கள் இருக்கின்றன.
நெல்லிக்காய் சீசன் போதுதான் கிடைக்கும் என்பதால் அதை தொக்கு செய்து ஜாடியில் அடைத்து வைத்தால் ஆண்டு முழுவதும் சாப்பிட்டு பலன்களைப் பெறலாம். இதனை எல்லா விதமான சாதத்திற்கும் வைத்து சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிட்டோம் என்றே தெரியாது. நீங்களும் இதனை ஒரு முறை செய்து பாருங்கள். மீண்டும் மீண்டும்செய்து தரும்படி வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக தொக்கு செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
நெல்லிக்காய் தொக்கு | Gooseberry Thokku Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1/4 கி பெரிய நெல்லிக்காய்
- 4 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 கப் நல்லெண்ணெய்
- உப்பு தேவையான அளவு
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1/4 கப் புளி கரைசல்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 4 வர மிளகாய்
செய்முறை
- முதலில் நெல்லிக்காயை தண்ணீரில் நன்கு கழுவி ஒரு துணியில் துடைத்து விட்டு கொட்டை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- பின் ஒரு கடாயில் சிறிதளவு தண்ணீர் விட்டு அதனுடன் நறுக்கிய நெல்லிக்காயை சேர்த்து வேக வைத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
- நெல்லிக்காய் ஆறிய பின் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- பின் நாம் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் விழுதை சேர்த்து கலந்து விடவும்.
- அதன்பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு புளி கரைசல் சேர்த்து கலந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி விடவும்.
- அவ்வளவுதான் மிகவும் சுவையான நெல்லிக்காய் தொக்கு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான நெல்லிக்காய் சிக்கன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி ருசி தான்!