கமன் தோக்லா ஒரு பிரபலமான குஜராத்தி உணவாகும், இலகுவான, பஞ்சுபோன்ற மற்றும் மென்மையான குஜராத்தி ஃபர்சான் இந்தியா முழுவதும் பிரபலமான சிற்றுண்டியாகும். இது ஒரு சிற்றுண்டியாகவோ அல்லது காலை உணவாகவோ பச்சை சட்னி அல்லது இனிப்பு புளி சட்னியுடன் கூட சாப்பிடலாம். பாரம்பரியமாக குஜராத்திகள் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் சன்னா பருப்பு ஆகியவற்றை 8 மணி நேரம் ஊறவைத்து காமோன் டோக்லாவைத் தயாரிக்கிறார்கள்.
இந்த உணவை எந்த சந்தர்ப்பத்திலும் தயாரிக்கலாம். டோக்ளா என்பது உங்கள் வீட்டில் கிடைக்கும் கடலைமாவு ,எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றைக் கொண்டு மற்றும் எளிதான செய்முறையாகும். . இனிப்பு மற்றும் புளிப்பு சுவையில் இருக்கும்
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காபி, டீ குடிக்கும் போது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், டோக்ளா செய்து கொடுங்கள். இது ஒரு சிறப்பான மற்றும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். வட இந்தியாவில் இது மிகவும் பிரபலமானது. மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.
கமன் டோக்ளா | Kaman Dhokla
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 இட்லி பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 1 கப் கடலை
- 3 நறுக்கிய பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் சர்க்கரை
- 1/2 டீஸ்பூன் உப்பு
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை
- 1 டீஸ்பூன் ஈனோ பவுடர்
- 3 கொத்து கறிவேப்பிலை
- 1 துண்டு இஞ்சி
- 2 வர மிளகாய்
- 1/4 டீஸ்பூன் கடுகு
- எண்ணெய் தேவையானஅளவு
செய்முறை
- முதலில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவு, சர்க்கரை, எலுமிச்சம்பழ சாறு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
- பின்பு வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
- இப்பொழுது தோசை மாவு பதத்திற்கு வந்த மாவை நாம் இருபது நிமிடம் அப்படியே மூடி வைக்க வேண்டும்.
- இப்பொழுது ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். இப்பொழுது தண்ணீர் கொதிக்கும் காத்திருக்கும் சமயத்தில் டோக்ளா மாவை தயார் செய்யலாம்.
- இப்பொழுது நாம் வைத்திருக்கும் கடலைமாவில் நாம் அரைத்து வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்க்கவேண்டும்.
- பின்பு மஞ்சள் தூள் மற்றும் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.
- இப்பொழுது ஒரு டேபிள்ஸ்பூன் ENO சேர்க்க வேண்டும். ENO சேர்த்ததும் மாவு நன்றாகப் பொங்கி வரும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணை தடவி நாம் வைத்திருக்கும் மாவை அதில் மாற்ற வேண்டும்.
- இப்பொழுது நாம் வைத்திருக்கும் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதித்த பிறகு அதனுள் மாவை மூடி வைத்து 25 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
- 25 நிமிடம் கழிந்த பின்பு மாவு வெந்தவுடன் வெளியே எடுத்து விடவும்.
- இப்பொழுது இதை தாளிக்க வேண்டும். தாளிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு சேர்த்து வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
- தாளித்த பின்பு நாம் வைத்திருக்கும் டோக்ளா மீது அதை சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான டோக்ளா ரெடி.
Nutrition
இதனையும் படியுங்கள் : குஜராத் ஸ்பெஷல் தித்திக்கும் சுவையான பாசந்தி ஸ்வீட்! இப்படி செஞ்சி பாருங்க