சோதி என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு காய்கறி குண்டு ஆகும். கலவையான காய்கறிகள் மெல்லிய தேங்காய்ப் பாலுடன் பச்சைமிளகாய்-இஞ்சி விழுதில் சமைத்து, பின்னர் கெட்டியான தேங்காய்ப் பாலுடன் சமைத்த மூங் பருப்புடன் செறிவூட்டப்படுகிறது. இறுதியாக எலுமிச்சை சாறு பயன்படுத்த படுகிறது. திருநெல்வேலியில், குறிப்பாக திருமணங்களின் போது, இந்த சுவையான சோதி சூடான சாதத்துடன் பரிமாறப்படுகிறது.
இதனையும் படியுங்கள் : திருநெல்வேலி சுவையான சொதி குழம்பு! இப்படி செஞ்சி பாருங்க
இது “மாப்பிள்ளை சோதி” என்றும் அழைக்கப்படுகிறது. ஆப்பம் , இடியப்பம் அல்லது சூடான வேகவைத்த சாதத்துடன் கூட நன்றாகப் போகும் அற்புதமான சைவக் குழம்பு ! சில நேரங்களில் காய்கறிகளுக்கு பதிலாக பலாப்பழ விதைகள் நறுமண அடிப்படையில் சமைக்கப்படுகிறது. பலாப்பழ விதைகளை அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக, இந்த அழகான கறியைக் கொண்டு செய்யலாம்.
பலாக்கொட்டை சொதி குழம்பு |Jackfruit Sothi kuzhambu
Equipment
- 1 மிக்ஸி
- குக்கர்
- 1 பவுள்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 15 பலாக்கொட்டை
- 1 தேங்காய்
- 10 பச்சை மிளகாய்
- 2 பெரிய
- 1 தக்காளி
- 1 டீஸ்பூன் கசகசா
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் நெய்
- 3 டீஸ்பூன் எண்ணெய்
- 1 துண்டு பட்டை
- கல்பாசி சிறிதளவு
- 3 கிராம்பு
- 1 அண்ணாச்சி பூ
- கறிவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவையானஅளவு
- தண்ணீர் தேவையானஅளவு
- 1 பிரியாணி
செய்முறை
- முதலில் தேங்காயை துருவி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு வெங்காயம் நறுக்கியது சேர்த்து வதக்கவும்.
- பின்பு தேங்காய் துருவலை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து பச்சை மிளகாய், கசகசாவை போட்டு வாசம் வரும் வரை வதக்கி இறக்கவும்.
- வதங்கிய பொருட்களை ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.
- பலாக்கொட்டையை வெறும் வாணலியில் லேசாக வாடினால் மேலே உள்ள தோல் உரித்து வரும் மேலே உள்ள வெள்ளை தோலை உரித்து எடுத்து குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.
- விசில் அடங்கியதும் வேக வைத்த பலாக் கொட்டைகள் எடுத்து மேலே உள்ள சிகப்பு தோலை உரித்து எடுக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, சோம்பு, கருவேப்பிலை தாளித்து ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.
- அவை வதங்கியதும் அரைத்த தேங்காய் மசாலாவை ஊற்றவும்.
- தேவையான உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து தோல் உரித்த பலாக்கொட்டையினை சேர்த்து கொதிக்கவிடவும்.
- கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். பலாகொட்டை சொதி குழம்பு ரெடி.