சுண்டல் வைத்து செய்யக்கூடிய கிரேவிக்கு பல ஊர்களில் பல பெயர்கள் உண்டு. தமிழ்நாட்டிலேயே ஒரு சில ஊர்களில் சுண்டல் குழம்பு என்றும் ஒரு சில ஊர்களில் சுண்டக்கல்லை புளிக்குழம்பு என்றும் குறிப்பாக கேரளாவில் கடலை கறி என்றும் அழைப்பார்கள்.
இந்த கடலை கறியை நாம் இட்லி, தோசை, சப்பாத்தி பூரி, சாதம், புட்டு, இடியாப்பம் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம். தமிழ்நாட்டை விட கேரளாவில் தான் இந்த கடலை கறி மிகவும் ஃபேமஸான ஒரு உணவு. இது மிகவும் ருசியான ஒன்றாக மட்டுமல்லாமல் மிகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ளது. சுண்டலில் இரண்டு வகைகள் உண்டு.
கருப்பு சுண்டல் மற்றும் வெள்ளை சுண்டல். அதில் இந்த கடலை கறிக்கு ஏற்றது கருப்பு சுண்டல் தான். இந்த கருப்பு சுண்டலில் செய்தால் தான் கடலைக்கறி இன்னும் ருசியாக நமக்கு கிடைக்கும். நாம் கருப்பு சுண்டலை ஊற வைத்தால் மட்டும் போதும் இந்த கடலைக்கறியை சீக்கிரமாகவே செய்து முடித்து விடலாம். வாங்க இந்த சூப்பரான அட்டகாசமான கடலை கறிய எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கடலை கறி | Kadalai Curry Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ கருப்பு சுண்டல்
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 8 காய்ந்த மிளகாய்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
- 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 3 டேபிள் ஸ்பூன் தனியா விதைகள்
- 5 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
செய்முறை
- முதலில் 8 மணி நேரம் கருப்பு சுண்டலை ஊற வைத்துக் கொள்ளவும்.நன்றாக ஊறிய பிறகு உப்பு சேர்த்து கடலையை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் தேங்காய் துருவல் ஆறு காய்ந்த மிளகாய் தனியா விதைகள் சீரகம் அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து அரைத்துக்கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். இரண்டும் நன்றாக வதங்கி பிறகு மிளகாய் தூள் கரம் மசாலா மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இப்போது வேக வைத்துள்ள சுண்டலை அதை சேர்த்துக் கொள்ளவும்.
- சிறிதளவு சுண்டலை நசுக்கி விட வேண்டும் பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை அதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
- நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டால் சுவையான கடலை கறி தயார்.