இன்று நம் தமிழரின் பாரம்பரிய உணவான கூழ் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் தமிழர்கள் அந்த காலத்திலேயே அவர்கள் விவசாயம் செய்யும் ஒவ்வொரு பொருளின் அவர்கள் அறிந்து வைத்துக் கொண்டுதான் அந்த பொருட்களை எல்லாம் விவசாயம் செய்து அதனை சரியான முறையில் பயன்படுத்தினார்கள். அதில் இந்த கூழும் ஒன்றுதான். சிறு தானியங்களை பயன்படுத்தி அவற்றை கூழாக செய்து அதை உணவாக எடுத்துக் கொள்வதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தால் தான்.
இதையும் படியுங்கள் : தமிழரின் பாரம்பரிய கேப்பை கூழ் செய்வது எப்படி ?
நம் உணவு பட்டியலில் இன்றைக்கு வரைக்கும் முக்கிய இடத்தில் கூழ் இருக்கிறது. ஆனால் நாம் நாவின் ருசிக்காக இன்று பல வகையான உணவுகளை சாப்பிட்டு நம்ம உடம்பை நஞ்சாக மாற்றி கொண்டு இறுக்கிறோம். அந்த விதத்தில் இன்று நாம் கம்பு கூழ் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நாம் கம்பு கூழ் செய்து சாப்பிடும் போது நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி எந்த நோய்களும் நம் உடம்பில் அண்டாமல் பார்த்துக் கொள்ளும். அதனால் இன்று இந்த கம்பு கூழ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கம்பு கூழ் | Kammang Kool Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 2 பெரிய பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 டம்பளர் கம்பு
- 5 டம்பளர் தண்ணீர்
- உப்பு தேவையான அளவு
- 15 சின்ன வெங்காயம் நறுக்கியது
- 1 கப் தயிர்
செய்முறை
- முதலில் ஒரு டம்ளர் அளவு கம்பை எடுத்து கல், தூசி, மண் போன்றவற்றை நீக்கி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு கம்பை ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் இரண்டு மூன்று முறை தண்ணீர் ஊற்றி நன்கு அலசி கொள்ளுங்கள். பின்பு நாம் அலசி சுத்தப்படுத்திய கம்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் இல்லாமல் திருதிருவன அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின் அரைத்த கம்பை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு ஊற வைத்த கம்பை தண்ணீரில்லாமல் வடிகட்டி தண்ணீரை தனியாக வைத்து கொள்ளுங்கள்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நம் வடிகட்டிய தண்ணீரையும் அதனுடன் நான்கு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் இதனுடன் கம்பையும் சேர்த்து 20 நிமிடங்கள் கம்பு கட்டியான பதத்திற்கு வரும் முறை கிளறிவிட்டு கம்பை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
- பின் கடாயை கீழ் இறக்கி வேக வைத்த கம்பை நன்றாக குளிர வைத்துக் கொள்ளுங்கள். கம்பு குளிர்ந்து கட்டியான பதத்திற்கு வந்தவுடன் இதை இப்போது எடுத்து கூலாக கரைக்க வேண்டும் என்றாலும் கரைத்துக் கொள்ளலாம் இல்லை ஒரு நாள் வைத்து அதன்பின் கரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
- கட்டியாக மாறிய கம்புடன் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விடுங்கள் மறுநாள் கம்ப கூழ் ஊற வைத்த தண்ணீரையும் வடிகட்டி விட்டு இதனுடன் ஒரு கப் அளவு தயிரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பின் தயிர் கலந்த கம்புடன் வடிகட்டிய நீரையும் ஊற்றி, உங்களுக்கு குடிப்பதற்கான தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.
- பின் இதனுடன் 15 சின்ன வெங்காயங்களை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். பின் உப்பு சரிபார்த்து தேவையென்றால் சேர்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான கம்மங்கூழ் தயாராகிவிட்டது.