இன்று நாம் சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி மற்றும் சோறு என அனைத்து உணவுகளுக்கும் சேர்த்து சாப்பிடும் வகையில் ஒரு அட்டகாசமான கிரேவி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று குடைமிளகாய் பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிருக்கு குருமா சாம்பார் என வழக்கமாக இதையே செய்து கொடுப்பதற்கு பதிலாக.
இதையும் படியுங்கள் : காரைக்குடி செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி ?
இது போல் ஒரு முறை இந்த சுவையான குடைமிளகாய் கிரேவி செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். இதை சோறுடன் வைத்து சாப்பிட்டால் ஒரு தட்டு சோறும் உடனடியாக காலியாகும். அதனால் இன்று இந்த குடைமிளகாய் கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
குடைமிளகாய் கிரேவி | Kudaimilagai Gravy Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
மசாலா அரைக்க
- 3 tbsp எண்ணெய்
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 1 துண்டு இஞ்சி நறுக்கியது
- 1 கைப்பிடி பூண்டு
- 1 தக்காளி நறுக்கியது
- ½ கப் தயிர்
கிரேவி செய்ய
- 2 மேசை கரண்டி எண்ணெய்
- 1 tbsp சீரகம்
- 1 கப் வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1 மேசை கரண்டி மிளகாய் தூள்
- 1 மேசை கரண்டி மல்லி தூள்
- ¼ tbsp மஞ்சள் தூள்
- அரைத்த மசாலா பேஸ்ட்
- 1 tbsp கரம் மசாலா
- 1 tbsp கஸ்தூரி மெத்தி
- உப்பு தேவையான அளவு
- 2 குடை மிளகாய் வதக்கியது
- 2 பெரிய வெங்காயம் வதக்கியது
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக்கொண்டு அதில் நாம் லைத்திருக்கும் வெங்காயம் மற்றும் குடை மிளகாயை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
- பின் நாம் சேர்த்த இரண்டு பொருட்களையும் இரண்டு நிமிடம் வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் மீண்டும் அதே கடாயை சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கி வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் தக்காளி போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
- இப்படி அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் அரை கப் அளவிற்கு தயிர் சேர்த்து பின் சிறிது தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
- பின் எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட்டு வதக்கவும்.
- பின் இதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் அதனுடன் நம் மிக்ஸியில் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு கடாயை மூடி வைத்து விடுங்கள்.
- பின் பின் மசாலாவும், எண்ணெயும் தனியாக பிரிந்து வந்ததும். இதனுடன் உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சரிபார்த்து. பின் கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறிவிட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
- அதன் பின்பு கிரேவி இரண்டு நிமிடம் வதங்கியதும் நம் முதலில் வதக்கிய வெங்காயம் மற்றும் குடை மிளகாயை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வேக வைத்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான குடை மிளகாய் கிரேவி இனிதே தயாராகிவிட்டது.