யாரிடமும் பொய் கூறக்கூடாது, ஏமாற்று வேலைகள் செய்யக்கூடாது என்பதனை சொல்லி சொல்லி வளர்த்து வந்த நம் முன்னோர்கள் தான் ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை செய்து கொள் என்றும் கூறினார்கள். ஏனென்றால் அவர்களுக்கு திருமணத்தின் மகத்துவம் பற்றி தெரிந்து இருக்கிறது. ஒருவன் சிறு வயது முதல் தன் திருமண வயது வரை வாழ்ந்த வாழ்க்கையை தலைகீழாக திருப்பி போடும் சக்தி திருமணத்திற்கு உண்டு. இப்படி நாம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு திருமணம் செய்வதற்காக ஜாதக பொருத்தம் தோஷங்கள் இருக்கின்றதா என நிறைய ஜோதிட வேலைகளை பார்ப்போம். அப்படி திருமணம் செய்யும் ஆணும் பெண்ணும் ஒரே ராசிக்காரர்கள் ஆக இருக்கும்போது அவர்களது கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் அதை நாம் இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
ஒரே ராசியில் கடக ராசிகாரர்கள் திருமணம் செய்யும்போது கணவன் மனைவி இருவரும் உணர்ச்சிபூர்வமான உணர்வுகளை கொண்டவர்களாக மாறிவிடுவார்கள். மேலும் இருவரும் ஒருவர் ஒருவர் உணர்வை புரிந்து நடந்து கொள்பவர்கள்.
ஒரே ராசியில் ரிஷப ராசிக்காரர்கள் திருமணம் செய்யும்போது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள், கருத்துக்கள், எண்ணங்கள் ஒருமித்ததாக இருக்கும். இவர்கள் திருமண வாழ்க்கையே முழு ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் வாழ்வார்கள்.
ஒரே ராசியில் மீன ராசிக்காரர்கள் திருமணம் செய்யும் போது கணவன் மனைவி இருவரும் ஒரே விஷயத்தை இருவேறு கோணங்களில் இருந்து பார்ப்பார்கள் அதனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு உண்டாவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது.
ஒரே ராசியில் கன்னி ராசிக்காரர்கள் திருமணம் செய்யும் போது கணவன் மனைவி உறவுக்குள் ஒருவர் ஒருவர் மீது அதிக நம்பிக்கையே கொண்டிருப்பவர்களாக மாறிவிடுவார்கள்.
ஒரே ராசியில் துலாம் ராசிக்காரர்கள் திருமணம் செய்யும்போது கணவன் மனைவி இருவரும் அவர்கள் செய்யும் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் குணம் உடையவர்களாக இருப்பர். இருப்பினும் கணவன் மனைவி இருவரும் ஒருவர் ஒருவர் புரிந்து நடந்து கொண்டால் இவர்கள் திருமண பந்தயத்தில் எந்த விரிசலும் உண்டாகாது.
ஒரே ராசியில் விருச்சிக ராசிக்காரர்கள் திருமணம் செய்யும்போது கணவன் மனைவி
இருவருக்கும் இடையில் அதீதே ஈர்ப்பும், கவர்ச்சியும் அதிகமாகவே இருக்கும். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் அதிகம் ஏற்பட்டு இவர்கள் உறவில் விரிசல் விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.ஒரே ராசியில் தனுசு ராசிக்காரர்கள் திருமணம் செய்யும்போது அந்த திருமண பந்தத்தில் கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவன் மனைவியுடனும் மனைவி கணவனுடனும் அதிக நேரத்தை செலவிடுவதற்கு விரும்புவார்கள்.
ஒரே ராசியில் கும்ப ராசிக்காரர்கள் திருமணம் செய்யும் போது கணவன் மனைவி இருவரும் சகித்துக் கொண்டே வாழும் குணமுடையவர்களாக மாறிவிடுவார்கள். இதனால் இவர்கள் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.
ஒரே ராசியில் மிதுனம் ராசிக்காரர்கள் திருமணம் செய்யும்போது இவர்களின் திருமண பந்தத்தில் ஒருவித ஈர்ப்பு இருக்கும் இருந்தாலும் கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் சமநிலை இன்றி இருப்பார்கள்.
ஒரே ராசியில் சிம்ம ராசிக்காரர்கள் திருமணம் செய்யும்போது இவர்களின் கணவன் மனைவி உறவுக்கு இடையே தடையாக வந்து நிற்பது முன்கோபம் மட்டும் தான். அதனால் இருவரும் சற்று பொறுமையுடன் திருமண வாழ்க்கையை நடத்தி வந்தால் பல பிரச்சினைகள் குறையும்.
முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…
பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…
வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…
கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…
மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…
புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…