பச்சைப் பயறு சாதம் என்பது ஒரு கொங்கு நாட்டு உணவாகும். நம் பாரம்பரியமான உணவுகளில் அதிகம் பயறு வகைகள், பருப்பு வகைகள், சிறு தானியங்கள் என்று சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் குழந்தைகளுக்கு பயிறு வகைகளை அதிகம் கொடுப்பதால் அவர்கள் உடல் ஆரோக்கியமும் நல்ல வளர்ச்சியும் பெறுவார்கள். நீங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக எப்பொழுதும் ஒரே மாதிரியான உணவு வகைகளை தான் பெரும்பாலும் கொடுத்து விடுவீர்கள். ஏதாவது ஒரு குழம்பு மற்றும் சாதம், ஒரு பொரியல் இது போன்ற முறையில்தான் உணவை கொடுத்து அனுப்பி விடுவீர்கள்.
எப்போதும் ஒரே போன்ற பருப்பு, சாம்பார் சாதம் வைத்து சலித்துப்போனவர்களுக்கு நிச்சயம் இந்த பச்சை பயிறு பருப்பு சாதம் வித்தியாச சுவையைக் கொடுக்கும். சுவை மட்டுமல்ல இது உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு. உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
பச்சை பயறு ஏராளமான புரோட்டீனைக் கொண்ட ஒரு சுவையான மற்றும் சத்தான பயறு. இந்த பச்சை பயறை நாம் ஊற வைத்து பச்சையாகவே சாப்பிடலாம். இது தவிர பச்சை பயறை கடைந்து, அதை சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். பச்சைப்பயிறு வைத்து குழம்பு தான் பெரும்பாலும் நாம் எல்லோரும் வைப்போம் அல்லவா. ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக பச்சை பயிரை வைத்து ஒரு வெரைட்டி ரைஸ் எப்படி செய்வது என்பதைப்பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பச்சை பயறு சாதம் | Pachai payaru satham recipe in tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 டம்ளர் அரிசி
- 1/2 டம்ளர் பாசிப்பருப்பு
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 கொத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி
- 5 பல் பூண்டு
- 1 பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
- 1 டீஸ்பூன் நெய்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு பவுளில் அரிசி மற்றும் பச்சை பயறு சேர்த்து நன்கு கழுவி, சுத்தம் செய்து விட்டு தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- பிறகு பூண்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக மசித்து வதக்கி சாம்பார் பொடி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- பிறகு அரிசி மற்றும் பாசிப்பயறை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி இலை தூவி கலந்து விட்டு குக்கரை மூடி விடவும்.
- பிறகு குக்கரில் 3 விசில் வரை வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சத்தான பச்சை பயறு சாதம் தயார். இதற்கு உருளைக்கிழங்கு பொரியல் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.