குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவு வகைகளில் பூரி, சப்பாத்தி என்றாலே பிடித்தமான ஒன்றாகும். அந்த பூரி சப்பாத்திக்கு கொண்டைக்கடலையை மற்றும் பாலக் கீரை வைத்து பாலக் சென்னா மசாலா எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த கிரேவிய சப்பாத்தி பூரி இவற்றுக்கெல்லாம் சைடிஷ் ஆக வைத்து சாப்பிட ரொம்பவே அருமையாக இருக்கும். இதனால் 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் 4 சப்பாத்தி சாப்பிடுவார்கள். மேலும் சன்னா மசாலாவை செய்வது மிகவும் ஈஸி. அதுமட்டுமின்றி இதில் பாலக் கீரை சேர்ப்பதால் அசைவ சுவையே மிஞ்சிவிடக் கூடிய அளவிற்கு பிரமாதமாக இருக்கும். பாலக் கீரை சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது. பாலக்கீரையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று தான் கீரை.
வாரம் ஒருமுறை உணவில் கீரையை சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்துடன் பிற சத்துக்களும் கிடைக்கும். வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. இதில் மெக்னீசியம், ஜிங்க், காப்பர் மற்றும் விட்டமின் – கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருப்பதற்கு உதவுகிறது. பாலக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து கொண்டால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம். இதில் பொதுவான பருப்புக்கூட்டு மசியல் என செய்வோம். ஆனால் பாலக் கீரையில் சுவையான சென்னா மசாலாவும் செய்ய முடியும். இந்த பாலக் சென்னா மசாலா மிகவும் ருசியாக இருக்கும். அதோடு தோசை, சப்பாத்தி, இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
பாலக் சென்னா மசாலா | Palak Chenna Masala Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 குக்கர்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1 கட்டு பாலக் கீரை
- 1 கப் வெள்ளை கொண்டை கடலை
- 3 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 3 டீஸ்பூன் சென்னா மசாலா
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 6 பல் பூண்டு
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1/2 டீஸ்பூன் சர்க்கரை
- 4 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
- 1/4 கப் பிரஷ் கீரிம்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் கொண்டைக்கடலையை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் காலையில் அதனுடன் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- பின் கீரை ஆறியதும் அதை மிக்ஸியில் சேர்த்து அதனுடன் பூண்டு, சீரகம், பெருங்காயத்தூள், சர்க்கரை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி மசிந்ததும் சென்னா மசாலா தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் அரைத்து வைத்துள்ள பாலக் விழுதை சேர்த்து நன்கு கிளறி அதனுடன் ப்ரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதிக்க விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பாலக் சென்னா மசாலா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : அடிக்கடி சாம்பார் வைத்தாலும் பாலக் கீரை சேர்த்து இப்படி சாம்பார் செய்து பாருங்க சலிக்காம சாப்பிடுவாங்க!