ஹோட்டலில் சாப்பிடப்படும் பன்னீர் கிரேவி தனி டேஸ்ட் தான் அதுவும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
அந்த பன்னீர் கிரேவி பலருக்கும் பிடிக்கும். ஆனால் வீட்டில் செய்து அதிகம் சாப்பிட்ருக்க மாட்டீங்க. ஏனென்றால் பன்னீர் கிரேவி எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியாது.
Advertisement
இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல் சுவையில் வீட்டிலே பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இந்த பன்னீர் கிரேவி சப்பாத்தி, இட்லி, தோசை, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
ஹோட்டலில் சாப்பிடப்படும் பன்னீர் கிரேவி தனி டேஸ்ட் தான் அதுவும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.அந்த பன்னீர் கிரேவி பலருக்கும் பிடிக்கும். ஆனால் வீட்டில் செய்து அதிகம் சாப்பிட்ருக்க மாட்டீங்க. ஏனென்றால் பன்னீர் கிரேவி எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியாது.இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல் சுவையில் வீட்டிலே பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.இந்த பன்னீர் கிரேவி சப்பாத்தி, இட்லி, தோசை, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Paneer Gravy, பன்னீர் கிரேவி
Prep Time 10 minutesmins
Cook Time 15 minutesmins
Total Time 26 minutesmins
Servings 4people
Equipment
2 பேன்
Ingredients
தேவையான பொருட்கள்:
எண்ணெய் தேவையான அளவு
4பட்டை
5கிராம்பு
2ஏலக்காய்
1நச்சத்திர சோம்பு
½ஸ்பூன் கல்பாசி
2பிரிஞ்சி இலை
1½டேபிள் ஸ்பூன் வர மல்லி
1டீஸ்பூன் சோம்பு
1டீஸ்பூன் சீரகம்
1டீஸ்பூன் மிளகு
4வர மிளகாய்
½டீஸ்பூன் கசகசா
10முந்திரி
1பெரிய வெங்காயம் நறுக்கியது
1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
2தக்காளி நறுக்கியது
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க:
200கிராம் பன்னீர்
1டீஸ்பூன் பட்டர்
கறிவேப்பிலை
½கப் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
¼டீஸ்பூன் மஞ்சள் தூள்
½டீஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள்
1குடைமிளகாய் நறுக்கியது
½கப் தேங்காய் பால்
கொத்தமல்லி இழை கொஞ்சம்
1ஸ்பூன் நெய்
Instructions
செய்முறை:
முதலில் ஒரு பேனில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய்,
Advertisement
கிராம்பு, கல்பாசி, நச்சத்திர சோம்பு, பிரிஞ்சி இழை, வர மல்லி, சோம்ம்பு, சீரகம், மிளகு, வரமிளகாய் சேர்த்து மிதமான தீயில் பாதி அளவு வறுபட்டதும், கசகசா, முந்திரி பருப்பு சேர்த்து கருகாமல் வறுக்கவும்.
பக்குவமாக வறுத்ததும், அதனை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அதே பேனில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், வெகும் வரை வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து நன்கு கொழைய வதக்கவும். அதனை மற்றொரு மிக்சி ஜாரில் சேர்த்து இத்தனையும் அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து பன்னீர் கடினமாக இருந்தால் சுடுதண்ணீரில் சிறிதுநேரம் போட்டு ஊறவைக்கவும் வைக்கவும்.
பிறகு ஒரு பேனில் எண்ணெய் சேர்த்து அதனுடன் பட்டர் சேர்த்து காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும், காஸ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து பாதி அளவு வெந்ததும் அரைத்த தக்காளி, வெங்காயம், விழுது சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலா திக்காக மாறும் வரை வதக்கவும்.
மாறியதும் அரைத்து வைத்த மசாலா விழுதை இதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து 4 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்.
மசாலா கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து, 3 நிமிடம் கொதிக்கவிடவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் பன்னீர் தண்ணீரை வடித்து சேர்த்துக்கொள்ளவும். 3 நிமிடம் வேக விடவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி, நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.
கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…