உளுந்து அப்படின்னாலே அது உடலுக்கு ரொம்பவே நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கக்கூடிய ஒரு தானியம். இந்த உளுந்துல இருக்கிற ஊட்டச்சத்துக்கள் ரொம்பவே அதிகம். இதுல இருக்குற புரோட்டீன்ஸ் விட்டமின்ஸ் எல்லாமே உடலுக்கு ரொம்பவே நல்ல சக்தியை கொடுக்கக் கூடியது. அது மட்டும் இல்லாம இந்த உளுந்து பொருளை சேர்த்து கொள்வதனால பெண்களுக்கு ரொம்ப ரொம்ப நிறைய நல்ல பலன்கள் கிடைக்கிறது. உளுந்த உணவுல சேர்த்து கொள்ளும் போதும் உளுந்து களியாகா வைத்து கொடுக்கும் போதும் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகளுக்கு எல்லாமே நல்ல மருந்தாக இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் சாப்பிடுபவர்களின் எலும்புக்கு நல்ல வலிமையை கொடுக்குது. இந்த உளுந்து உணவுகளை கர்ப்பமான பெண்களும் அதிக அளவில் எடுத்துக்கணும் அப்படின்னு சொல்றாங்க. அது மட்டும் இல்லாமல் இந்த உளுந்து மூட்டு வலி பிரச்சனைகளை சரி செய்வதுக்கும் பயன்படுது. அதுமட்டுமல்லாமல் உளுந்து வந்து ரொம்ப ரொம்ப ருசியான ஒரு தானியம்.
உளுந்துல நிறைய விதமான உணவுகள் செய்யலாம் உளுந்து லட்டு, உளுந்து கஞ்சி, உளுந்து களி இதெல்லாம் செய்து சாப்பிட முடியாதவர்கள் ரொம்ப சுலபமாக உளுந்துல பொடி அப்படி இல்லன்னா இட்லி கூட சாப்பிட்டுக்கலாம். இந்த மாதிரி ஏதாவது ஒரு வகையில உணவுல உளுந்த சேத்துகிறது ரொம்பவே நல்லது தான். இப்போ ராயலசீமாவில் ரொம்பவே ஃபேமஸான உளுந்து பச்சடி எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்கும் இருக்கோம். வாங்க அந்த பச்சடி எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.
ராயலசீமா உளுந்து பச்சடி | Rayalseema Urad Pachadi
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் கருப்பு உளுந்து
- 1 ஸ்பூன் தனியா விதைகள்
- 5 காய்ந்த மிளகாய்
- 1 ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 6 பல் பூண்டு
- 1 தக்காளி
- புளி திராட்சை அளவு
- 1 ஸ்பூன் வெல்லம்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க
- எண்ணெய் தேவையான அளவு
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
செய்முறை
- முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் தனியா விதைகளை வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- பிறகு அதில் மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். இப்பொழுது வானொலியில் எண்ணெய் சேர்த்து கருப்பு உளுந்தை நன்றாக நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- வறுத்த கருப்பு உளுந்தை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைக்கவும். பிறகு அதே வானொலியில் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- பின் வானெலியில் பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும். வதக்கிய பொருட்கள் எல்லாம்ஆரிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கருப்பு உளுந்து, மிளகு , சீரகம், தனியா விதைகள், காய்ந்தமிளகாய் ,உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதில் வதக்கி வைத்துள்ள பூண்டு , தக்காளியை சேர்த்து சிறிதளவு தண்ணி ஊற்றி புளியுடன் சேர்த்துநன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து அதில் அரைத்து வைத்துள்ள உளுந்து விழுதை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- பின்பு அதில் வெங்காயத்தை நசுக்கி சேர்த்து நன்றாக ஒரு பத்து நிமிடம் கலந்து விட்டால் சுவையான ராயலசீமா உளுந்து பச்சடி தயார்.