சேமியா பருப்பு உசிலி என்ற பெயரை கேட்டவுடனே அனைவருக்கும் இது என்னவென்று ஒரே சந்தேகமாக இருக்கும். இது சேமியாவை வைத்து செய்யக்கூடிய ஒரு டிபன். இதனை நாம் காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம். எப்பொழுதுமே காலை உணவு மற்றும் இரவு உணவாக இட்லி, தோசை பூரி சப்பாத்தி பொங்கல் உப்புமா என ஒரே மாதிரியாக செய்து சாப்பிட்டு பலருக்கு போர் அடித்திருக்கும்.
அவர்களுக்கு இந்த மாதிரி சேமியா பருப்பு உசிலி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். உப்புமா பிடிக்காதவர்கள் கூட இதனை விரும்பி சாப்பிட வாய்ப்புள்ளது. எனவே இதனை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எளிமையான முறையில் மிக சுலபமாக இதனை செய்து முடித்து விடலாம். சாப்பிடுவதற்கும் சுவைய அருமையாக இருக்கும் அதே நேரத்தில் இது ஆரோக்கியமானதும் கூட.
மாலை நேரத்தில் குழந்தைகள் வீட்டிற்கு வரும் நேரத்தில் கூட பசியோடு வந்தால் இதனை செய்து கொடுக்கலாம் பசிக்கு நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் சமைப்பவர்களும் இந்த மாதிரி வித்தியாசமாக ஏதாவது முயற்சி செய்தால் அவர்களுக்கும் சமையல் மீது ஒரு தனி ஆர்வம் உண்டாகும். எனவே இந்த சுவையான சேமியா பருப்பு செடி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
சேமியா பருப்பு உசிலி | Semiya Paruppu Usili Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் கடலை பருப்பு
- 1/2 கப் துவரம் பருப்பு
- 3 பச்சை மிளகாய்
- 3 காய்ந்த மிளகாய்
- 1 கப் சேமியா
- 10 சின்ன வெங்காயம்
- 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
- 2 தக்காளி
- 1 கப் தேங்காய்துருவல்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
- பருப்புகள் இரண்டும் ஊறிய பிறகு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தேவைக்கு ஏற்ப உப்பையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்த விழுதையும் சேமியாவையும் ஒரு இட்லி பாத்திரத்தில் போட்டு பத்து நிமிடங்கள் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பிறகு வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- பிறகு பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்றாக வதக்க வேண்டும். இந்த கலவைக்கும் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.
- அனைத்தும் வதங்கியவுடன் வேக வைத்துள்ள சேமியா மற்றும் பருப்பு கலவையை வெங்காயம் தக்காளி கலவையுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- இறுதியாக தேங்காய் பூ சேர்த்து இறக்கினால்சுடச்சுட சேமியா பருப்பு உசிலி தயார்.