இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. சேப்பங்கிழங்கு நம்முடைய ஊர்களில் குட்டிக்குட்டியாகக் கிடைக்கும். இவை பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளன.
பெரும்பாலான வீட்டில் வாரத்திற்கு ஏழு நாட்களில் ஓரிரு நாள் தான் அசைவம் இருக்கும், மற்ற நாட்களில் சைவம் தான் அதிலும் குறிப்பாக இரண்டு நாளில் சாம்பார், கார குழம்பு கண்டிப்பாக எல்லோர் வீட்டிலும் செய்து விடுவார்கள். எப்போதும் ஒரே போன்ற சாம்பார், ரசம் என வைத்து சலித்துப்போனவர்களுக்கு, கார குழம்பு சரியான ஆப்ஷன். அதிலும் சேப்பங்கிழங்கு சேர்த்து செய்யும்போது அதன் சுவையே தனியாக இருக்கும்.
புளிப்பு, இனிப்பு மற்றும் காரம் அனைத்தும் சேர்ந்து தனித்துவமான சுவையை கொடுக்கும் இந்த ரெசிபியை இனி பார்க்கலாம். குழம்புன்னா யார்க்கு தான் பிடிக்காது. அதுலயும் கார குழம்பு நினைச்சாலே சாப்பிடணும் போல இருக்கும். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு மகிழலாம். உருளைக்கிழங்கு போலவே சேப்பங்கிழங்கும் சுவையில் அட்டகாசமாக இருக்கும். இதை சமைக்கும் போது நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலில் சேர்க்கும் போது வாசனைக் கொஞ்சம் கூடுதலாகவும், கூடுதல் சுவையுடனும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். அதோடு பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாகவும் இருக்கும்.
சேப்பங்கிழங்கு கார குழம்பு | Seppankilangu Kara Kulampu Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 குக்கர்
- 1 மண் சட்டி
தேவையான பொருட்கள்
- 1/4 கி சேப்பங்கிழங்கு
- 2 தக்காளி
- 1/2 கப் சின்ன வெங்காயம்
- 5 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் தனியா
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/4 டீஸ்பூன் மிளகு
- 1/4 டீஸ்பூன் வெந்தயம்
- 1/4 கப் தேங்காய் துருவல்
- புளி எலுமிச்சை அளவு
- 1 கொத்து கறிவேப்பில்லை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
செய்முறை
- முதலில் சேப்பங்கிழங்கை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஐந்து விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். பின் தோலை உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா, சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை, வர மிளகாய், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பின்னர் தேங்காய் துருவல், மஞ்சள் தூள், சேர்த்து நன்கு வதக்கி ஆற விடவும். பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு மண் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வேக வைத்த சேப்பங்கிழங்கை சேர்த்து பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலந்து விடவும்.
- குழம்பு சிறிது கொதித்ததும் தேவையான அளவு உப்பு, புளி கரைசல் மற்றும் தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும். பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும்.
- அவ்வளவுதான் மிகவும் சுவையான சேப்பங்கிழங்கு கார குழம்பு தயார். இந்த குழம்பு பாரம்பரிய ருசியில் இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சுட சுட சேப்பங்கிழங்கு சமோசா இப்படி செய்து பாருங்க!