தென்னிந்திய உணவுகளில் செய்யப்படும் குழம்பிலேயே சுண்டைக்காய் வத்தல் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். இந்த குழம்பை மதிய வேளையில் சாதத்துடன் பிசைந்து, அப்பளம், பொரியல் என்று வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. சுண்டைக்காய் சுவை நம்மில் பலருக்குப் பிடிக்காது. அதிலும் குழந்தைகள் சுண்டக்காய் என்றால் அலறி அடித்துக் கொண்டு தான் ஓடுவார்கள். ஆனால் இந்த முறையில் சுண்டக்கா குழம்பை வைக்கும் போது கொஞ்சம் கூட அதன் கசப்புத் தன்மை தெரியாமல், சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த சுண்டைக்காயில் மருத்துவக் குணம் நிறைந்துள்ளது. மருந்துகள் பொதுவாக கசப்புச் சுவை நிறைந்ததாக இருக்கும். கல்யாணவீடுகளிலும், உணவகங்களிலும் தயாரிக்கப்படுகின்ற சுண்டைக்காய் வற்றல் வத்தக்குழம்புக்கென்றெ பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிக ஊட்டசத்துக்கள் கொண்ட சுண்டைக்காயை எதாவது ஒருவகையில் வாரமிருமுறை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.
சுண்டை, மலைச்சுண்டை, பேயத்தி, கடுகி, அமரக்காய் என்றபெயர்களிலும் குறிப்பிடப்படுகிறது. சுண்டைக்காயும் கூட கசப்பாகதான் இருக்கும். ஆனால், வயிற்றுப்பூச்சிகளை கொல்வதில் இருந்து மூலநோயைக் குணப்படுத்துவது, ஹீமோகுளோபினை அதிகரிப்பது என பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது. இதில் சுவையான குழம்பு வைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
சுண்டைக்காய் தொக்கு | sundakkai thokku recipe in tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் சுண்டைக்காய்
- 2 பெரிய வெங்காயம்
- 1/4 கப் நல்லெண்ணெய்
- 2 தக்காளி
- புளி எலுமிச்சை அளவு
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் சுண்டைக்காயை கழுவி, கொஞ்சம் தட்டிக் கொள்ளவும்.
- தக்காளியை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பின் கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதன்பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு சிறிது நேரம் வேக விடவும்.
- அதன்பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு, சுண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- சுண்டைக்காய் வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி எண்ணெய் பிரிய வேகவிடவும்.
- பிறகு கடைசியில் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
- குழம்பு கொதித்து, பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான சுண்டைக்காய் தொக்கு தயார்.