மாங்காய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். பச்சை மாங்காய் மரத்தில் பார்த்தாலே நாவில் நீர் சுரக்கும் அளவிற்கு விருப்பம் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி மாங்காய்களை தோட்டங்களில் தெரியாமல் பறித்து காக்காய் கடி கடித்து உண்பவர்களும் அதிகம் இருக்கிறார்கள். திருட்டு மாங்காய்க்கு தான் ருசி அதிகம் என்று கூறிக்கொண்டு மாங்காய் பறித்து மாட்டி கொண்டவர்கள் பலர். இப்பொழுதெல்லாம் வளர்ந்து விட்டவர்கள் தங்களது சிறுவயது ஏதோ ஒரு இடத்தில் ஆவது மரத்திலிருந்து மாங்காயை பறித்து அப்படியே உப்பு மிளகாய் தூள் சேர்த்து உண்டு மகிழ்ந்து இருப்பார்கள். இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும். இப்படி அந்த மாங்காய் மீது உள்ள விருப்பம் என்பது எந்த வயதிலும் குறைவதே இல்லை. அப்படிப்பட்ட மாங்காயில் நாம் குழம்பு, ஊறுகாய், தொக்கு, ஏன் வெறும் உப்பில் அறிந்து போட்டு கூட சாப்பிட்டு இருப்போம்.
கல்யாண விருந்துகளில் வைக்கப்படும் மாங்காய் பச்சடி அனைவரின் நாக்கிலும் நர்த்தனம் ஆடிக்கொண்டே இருக்கும். இந்த சுவையான மாங்காய் பச்சடியை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள இருக்கின்றோம். மாங்காய் சீசனில் கல்யாணங்களில் நிச்சயமாக இருக்கும் ஒரு உணவாக இந்த மாங்காய் பச்சடி இருக்கிறது. இந்த மாங்காய் பச்சடியை சித்திரை ஒன்று அன்று சிலர் செய்து உண்பார்களாம். காரணம் இந்த மாங்காய் பச்சடியில் அறுசுவையும் கலந்திருப்பது தான்.
ஒரே உணவு பொருள் எப்படி அறுசுவையும் கலந்திருக்கும் என்று ஆராய்ந்து தான் பார்க்க வேண்டும். இந்த மாங்காய் பச்சடியை நாவில் வைத்தவுடன் நமக்கு முதலில் எந்த சுவை உணர்கிறது என்பதை கண்டறியவே சில நிமிடங்கள் ஆகும். அப்படிப்பட்ட மாங்காய் பச்சடியை எப்படி ருசியாக சமைத்து உன்னலாம் என்பதை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம் வாருங்கள். சுவையான மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய மாங்காய் பச்சடி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் .
ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…
பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…
புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…
கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…
பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…
கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…