பொங்கல் அன்னைக்கு செய்யக்கூடிய வெண்பொங்கல் இது ரொம்பவே சுவையா இருக்கும். பொங்கல் அப்படின்னாலே எல்லாருக்கும் ஞாபகம் வருது சக்கரை பொங்கலும் மிளகு பொங்கல் தான். பொங்கல் நாளன்று செய்யக்கூடிய இந்த வெண்பொங்கல் ரெண்டு பொங்கல் விட ரொம்ப நல்லா இருக்கும். இந்த வெண்பொங்கல் ரொம்பவே சுவையா இருக்கும். இந்த வெண்பொங்கல் கூட எந்த ஒரு குழம்பு சாம்பார் எது வைச்சு சாப்பிட்டாலும் அவ்வளவு சூப்பரா இருக்கும். இந்த சுவையான பொங்கல் அன்னைக்கு செய்யக்கூடிய வெண் பொங்கல் பால் பயன்படுத்தி செய்யக்கூடியது.
ரொம்ப வே சுலபமா இந்த வெண்பொங்கல பொங்கல் அன்னைக்கு எல்லாரும் செஞ்சு சாப்பிடுவாங்க. இந்த வெண்பொங்கல் மத்த எந்த நாளையும் செய்ய மாட்டாங்க. சில உணவு பொருட்கள் எல்லாம் வந்து அந்தந்த நாட்கள் ஆன விசேஷங்கள் மட்டும்தான் செய்யப்படுது. அப்படி ஒரு உணவுதான் இந்த வெண் பொங்கல். இந்த வெண்பொங்கல் சாதாரண நாட்கள்ல இதுவரைக்கும் செய்தது கிடையாது. நமக்கு எப்ப தோணுதோ அப்ப செய்து சாப்பிடலாம். இது செய்யக்கூடாது என்ற ஒரு உணவு கிடையாது ஆனால் யாரும் செய்தது கிடையாது. எப்பொழுதும் பொங்கல் என்று மட்டும் தான் செய்வார்கள்.
இந்த ருசியான வெண்பொங்கல் செய்து அன்னைக்கு சாம்பார் வச்சி சாப்பிடும்போது வெண்பொங்கலோட அவ்வளவு சூப்பரா இருக்கும். அது மட்டும் இல்லாம இந்த வெண்பொங்கல் இரவு நேரத்தில் கொத்தமல்லி துவையல் அரைத்து வைத்து சாப்பிடும்போது அவ்வளவு சூப்பரா இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இந்த வெண்பொங்கல் பொங்கல் அன்னைக்கு நைட்டு தண்ணீர் ஊத்தி வச்சிட்டு நைட் ஃபுல்லா ஊற விட்டு காலையில் பழைய சாதமா மோர் சேர்த்து கொத்தமல்லி துவையல் வச்சு சாப்பிடும்போது அவ்வளவு சுவையா இருக்கும். இந்த வெண்பொங்கல பழைய சாதமா சாப்பிடணும் அப்படிங்கிறதுக்காகவே நாங்க எல்லாம் சின்ன வயசுல ரொம்ப காத்துட்டு இருப்போம். அப்படி சுவையான இந்த வெண்பொங்கல எப்படி செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
வெண்பொங்கல் | Venpongal recipe in tamil
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ பச்சரிசி
- 1/4 லிட்டர் பால்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் பச்சரிசியை எடுத்து கழுவிக்கொள்ள வேண்டும் . முதலில் கழுவும் தண்ணீரை கீழே ஊற்றி விட வேண்டும். பிறகு இரண்டு முறை கழுவும் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அடுப்பில் கடாயை வைத்து பாலை ஊற்றி பால் பொங்கி வரும் வரை காத்திருக்க வேண்டும்.
- பால் நன்றாக பொங்கி வந்த பிறகு அரிசி கழுவி எடுத்து வைத்துள்ள தண்ணீரை அந்த பாலில் ஊற்றி மீண்டும் பொங்கி வரும் வரை காத்திருக்க வேண்டும். அரிசி வேகுமளவிற்கு தண்ணீர் வைத்தால் போதும்.
- அரிசி களைந்த தண்ணீர் கொதித்து பொங்கி வந்த பிறகு அதில் கழுவி வைத்துள்ள பச்சரிசியை சேர்த்து கலந்து விட்டு வேக வைக்க வேண்டும்.
- நன்றாக பச்சரிசி வெந்து பொங்கல் பதத்திற்கு வந்த பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால் சுவையான வெண்பொங்கல் தயார். இந்த வெண் பொங்கலோடு சாம்பார் , புளி குழம்பு, கொத்தமல்லி துவையல் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.