பாட்டி காலத்து ஸ்டைலில் அப்பம் சூப்பரான சுவையில், ஆரோக்கியமான முறையில் கோதுமை மாவு கொண்டு எப்படி தயாரிப்பது? மேலே மொறு மொறு என்று கிரிஸ்பியாகவும், உள்ளே மெத்தென்று மிருதுவாகவும் இருக்கக் கூடிய இந்த ஆரோக்கியம் நிறைந்த சுவையான கோதுமை அப்பம் சுலபமாக எப்படி நாமும் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
வெறுமனே கோதுமை மாவை கலந்து தோசை சுட்டு பார்த்தால் யாருக்கும் தோசை பிடிப்பது கிடையாது. அதில் சில பொருட்களை சேர்த்து நீங்கள் இந்த முறையில் அப்பம் செய்யும் பொழுது ரொம்பவே ருசியானதாக இருக்கும், ஆரோக்கியமான முறையில் அப்பம் சுலாமாக சுடுவதற்கு வரும். ரொம்ப ருசி நிறைந்த இந்த கோதுமை அப்பம் அருமையான ரெசிபி, குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்க.
அந்த வகையில் கோதுமை அப்பம், கோதுமை தோசை சுடுவது போல ருசியாக வருவதற்கு எளிதான முறையில் செய்யலாம் . எப்பொழுதும் தோசை, இட்லி என்று போர் அடிக்குதா. கொஞ்சம் இப்படி வித்தியாசமாக கோதுமை அப்பம் சுட்டு சாப்பிட்டு பார்க்கலாமே. உங்கள் வீட்டில் , கோதுமை மாவு இருந்தால் சட்டுனு பத்து நிமிடத்தில் இந்த அப்பம் செய்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க நேரத்தை கடத்தாமல் ருசி தரும் அந்த கோதுமை அப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
கோதுமை அப்பம் | Wheat Appam Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ கோதுமை மாவு
- 100 கிராம் அரிசி மாவு
- 150 கிராம் வெல்லம்
- 1/4 லிட்டர் எண்ணெய் அல்லது நெய்
- 4 ஏலக்காய்
செய்முறை
- கோதுமை மாவு,அரிசி மாவு இரண்டையும் தனித்தனியே சலித்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் வெல்லத்தை போட்டு கரைத்துக் கொள்ளவும்.
- பிறகு அதில் கோதுமை மாவை சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.அத்துடன் அரிசி மாவு, ஏலக்காய்பொடி சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவு எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஊற்றிய உடனே உப்பிவரும்.பிறகு திருப்பி போட்டு சற்று பொன்னிறமாக வரும் வரை வேகவிடவும்.
- இருபுறமும் சிவக்க வெந்ததும் கரண்டியால் எண்ணெய்யை வடித்து பிறகு எடுக்கவும். இது சற்று எண்ணெய்குடிக்கும் பதார்த்தம். எண்ணெய் பதார்த்தம் ஒத்துக் கொள்ளாதவர்கள் இதே மாவை வைத்துபணியாரம் செய்யலாம்.
- பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து அதில் நெய் தடவி, மாவை கரண்டியில் எடுத்து ஒவ்வொரு குழியிலும் ஊற்றி வேகவிடவும்.ஒரு புறம் சிவக்க வெந்ததும் திருப்பி போட்டு வேக எடுக்கவும்.
- இருபுறமும் பொன்னிறமாக சிவந்த வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.