பொதுவாக நாம் எப்போதும் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டியது உள்ளது நாம் இப்பொழுதுதான் காலையில் உணவாக இட்லி, தோசை மற்றும் வெண்பொங்கல் போன்ற டிபன் வகைகளை செய்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக காலையில் உணவாக பழைய கஞ்சி, கூல் வகைகள், புட்டு வகைகள் என உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவு வகைகளை மட்டும் தான் உணவாக எடுத்து கொண்டனர். அந்த வகையில் இன்று நாம் கேரளா ஸ்டைலில் செய்யப்படும் அரிசி புட்டு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
இதையும் படியுங்கள் : சுவையான கேரளா மட்டன் குருமா செய்வது எப்படி ?
நீங்கள் இப்படி காலை உணவாக புட்டு செய்து அதனுடன் வாழைப்பழத்தை உணவாக சாப்பிட்டு பார்த்தால் அதன் சுவை சொல்வதற்கு வார்தையை இல்லை அந்த அளவிற்கு மிகவும் ருசியாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுபவர்கள். இனி தினமும் காலையில் இதை செய்து தரச் சொல்லி உங்களை கேட்பார்கள். அந்த அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த கேரளா ஸ்டைல் அரிசியை புட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
சுவையான அரசி புட்டு
Equipment
- 1 புட்டு அவிக்கும் பாத்திரம்
- 1 கடாய்
- 1 மீடியம் அளவு தட்டு
- 2 பவுள்
தேவையான பொருட்கள்
- 1/2 KG பச்சரிசி தேவையான அளவு
- 1 முமு தேங்காய்
- 1 கப் சீனி அல்லது கருப்பட்டி தேவையான அளவு
- தூள் உப்பு தேவையான அளவு
செய்முறை
- சுவையான அரசி புட்டு செய்முறை
- முதலில் ஒரு மணி நேரங்கள் பச்சரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறிய பச்சரிசியை ஈரம் இல்லாத துணியில் அரிசியை பரப்பி விட்டு பேன் அல்லது நிழலில் உலர வையுங்கள்.
- உலர வைத்த பச்சரிசி ஈரம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு ஈரம் காய்ந்தவுடன் மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும்.
- அப்படி அரைத்த மாவை சல்லடையில் நன்றாக சலித்துக் கொண்டு சலித்தேடுத்த மாவை ஒரு கடாய் ஒன்றில் போட்டு நன்றாக வறுக்கவும்.
- மாவு திருத்திரு என்று வரும் அளவுக்கு வறுத்து எடுக்கவும் அப்படி வறுத்தெடுத்த மாவை ஒரு பவுல்லிள் எடுத்து கொள்ளவும்.
- அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொண்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். (மாவு கட்டியாகவும் அல்லது கூழ் மாதிரியும் ஆகிவிடக்கூடாது ) திருத்திருவனா இருக்கவும்.
- அதன் பிறகு நாம் எடுத்துக்கொண்ட தேங்காய்யை துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.
- பின்பு புட்டு அவிக்கும் பாத்திரத்தில் அடியில் அரை பாத்திரம் தண்ணீர் ஊற்றி நிரப்பி நன்றாக கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதித்த உடன் புட்டுக் குழாயில் அடியில் சில்லை போட்டு 1/4 குழாய்க்கு புட்டு மாவை அமுக்காமல் போடவும்.
- பிறகு தேங்காய் உள்ளே போட்டு மீண்டும் புட்டு மாவை உள்ளே வைக்கவும். மேல் துருவிய தேங்காய் போடவும் அதற்கு மேல் மறுபடியும் புட்டு மாவு வைத்து துருவிய தேங்காய் மேலே போட்டுவும்.
- புட்டு குழாயை மூடி இப்போது புட்டுக் குழாயை புட்டு பாத்திரத்தில் வைத்து மாட்டி விடவும்.
- புட்டுக் குழாயின் மேல் உள்ள துவாரம் வழியாக ஆவி வரும் வரை காத்திருக்கவும் ஆவி வந்ததன் பின் ஒரு நிமிடங்கள் காத்திருந்து புட்டுக் குழாயை கழட்டி எடுக்கவும்.
- நாம் எடுத்துக்கொண்ட மீடியமான தட்டை மேல் புட்டுக் குழாயை வைத்து ஏதாவது கரண்டி ஒன்றை புட்டுக் குழாய் பின் வழியில் இருந்து குத்தி மெதுவாக புட்டை குத்தி வெளிய எடுக்க வேண்டும்
- எடுத்த புட்டினுடன் சீனி அல்லது கருப்பட்டியை சேர்த்து சாப்பிடவும்.
Nutrition
English Overview: Arisi puttu is one of the most important dishes in south india. arisi puttu recipe or arisi puttu seivathu eppadi or arisi puttu recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.