- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் சாம்பார், சட்னி என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் குடைமிளகாய் மற்றும் தக்காளி மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு சைடிஷ்ஷாக குடைமிளகாய் தக்காளி வைத்து ஒரு வித்தியாசமான தொக்கு செய்து பாருங்கள். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சப்பாத்திக்கு சைடிஷ் என்று கேட்டால் பலரும் சிறிது நேரம் கூட தாமதிக்காமல் தக்காளி தொக்கு என்று தான் சொல்வார்கள்.
ஏனென்றால் சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கின் காம்பினேஷன் அவ்வாறு. எப்போதும் ஒரே மாதிரி தக்காளி தொக்கு செய்யாமல் சற்று வித்தியாசமாக குடைமிளகாயுடன் தக்காளி சேர்த்து ஒரு சூப்பரான தொக்கு செய்யுங்கள். சப்பாத்திக்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் ஒரு அருமையான ரெசிபி தான் இந்த குடைமிளகாய் தக்காளி தொக்கு. முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
முக்கியமாக இந்த தொக்கு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை ட்ரை செய்யலாம். இந்த தொக்கை பக்குவமாக செய்தால் மூன்று மாதங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். சிறிதும் நேரமில்லாமல் நகர்புறங்களில் பணி செய்து கொண்டிருக்கும் நண்பர்கள் ஒருமுறை இந்த தொக்கு செய்து வைத்துக் கொள்ளுங்கள். வேலை விட்டு வந்து சமைக்க முடியாத நேரத்திலும் பொரியல் கூட்டு எதுவும் இல்லாத சமயத்திலும் இந்த தொக்கை வைத்து சாப்பிடலாம். வாருங்கள் இந்த பதிவில் சூப்பரான குடைமிளகாய் தக்காளி தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா தக்காளி பப்பு
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடுகு, வெந்தயம் சேர்த்து நன்கு சிவந்ததும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் தக்காளியை சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்த குடைமிளகாய், தக்காளி சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள், வெல்லம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் எண்ணெய் நன்கு பிரிந்து வந்ததும் அரைத்து வைத்துள்ள கடுகு, வெந்தய பொடியை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான குடைமிளகாய் தக்காளி தொக்கு தயார்.






