வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான லஞ்ச் செய்து போர் அடிக்குதா இனி காலையில் இந்த கேரட் பருப்பு சாதத்தை செய்து ஸ்கூலுக்கு கொடுத்து விடுங்கள். உடலுக்கு நல்ல சத்துக்கள் அளிக்கும்.! இது பச்சிளம் குழந்தைகளுக்கான கேரட் பருப்பு சாதம் இது ஈசியாக செய்யக்கூடிய உணவு. குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். பாசிப்பருப்பு புரதச்சத்து நிறைந்தது. மினரல்ஸ், வைட்டமின் பி6 பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு இவை மிகவும் முக்கியம்.
குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதோடு இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். எளிதில் செரிமானம் ஆக கூடும். கேரட் நார்ச்சத்து நிறைந்தது. குழந்தையின் செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கிறது. இதில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. குழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வெரைட்டி ரைஸ் என்றால் அதில் இந்த கேரட் பருப்பு சாதத்திற்கு முதலிடம் உண்டு. கேரட் சாதம் தானே, எல்லோருக்கும் செய்ய தெரியுமே. ஆனால், வழக்கம் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இப்படி ஒரு முறை இந்த கேரட் பருப்பு சாதத்தை ட்ரை பண்ணி பாருங்க.
சுவையிலும் மணத்திலும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும். இது மிகவும் எளிமையான மற்றும் ஆரோக்கியமான சாதம். இதனை பிரஷர் குக்கரில் செய்யலாம். இது விரைவாக செய்யக் கூடிய உணவு. ஆகையால் அலுவலகம் செல்வோருக்கும், குழந்தைகளின் மதிய உணவிற்கும் ஏற்றதாகும். மேலும் இதனை சுவையாக ஆரோக்கியமாக்க மாற்ற விரும்பினால், பட்டாணி, உருளைக்கிழங்கு, அல்லது முருங்கக்காய் சேர்த்து செய்யலாம். இந்த கேரட் பருப்பு சாதத்தை உருளைக்கிழங்கு வருவல், தயிர் பச்சடி, வெண்டக்காய் பொரியல், மற்றும் அப்பளத்துடன் பரிமாறலாம்.
கேரட் பருப்பு சாதம் | Carrot Paruppu Sadam Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 50 கி பாசிப்பருப்பு
- 100 கி அரிசி
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 தக்காளி
- 4 கேரட்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 4 பல் பூண்டு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 2 டேபிள் ஸ்பூன் நெய்
செய்முறை
- முதலில் கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியை கழுவி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
- பிறகு நறுக்கி வைத்துள்ள கேரட் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் அரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்கு கழுவி சேர்த்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து குக்கரை மூடி நான்கு விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- அதன்பிறகு குக்கரை திறந்து சாதம் நன்றாக மசியும் வரை கடைந்து அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரட் பருப்பு சாதம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் கேரட் பாசுந்தி இப்படி வீட்டிலேயே செய்து கொடுத்தால் எல்லாரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!