- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
கடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் முக்கிய உணவு வகை இறால். இது மிகவும் சுவை மிகுந்த உணவாகும். ஆரோக்கியத்திலும் இறால் மற்ற கடல் உணவுகளுக்கு சளைத்ததில்ல்லை. இதுவரை எத்தனையோ வகையான இறால் ரெசிபியை செய்திருப்பீர்கள் ஆனால் செட்டிநாடு ஸ்டைலில் இறால் தொக்கு செய்து சுவைத்ததுண்டா? ஆம், செட்டிநாடு ரெசிபிக்களில் இறால் ரெசிபியும் உள்ளது. காரைக்குடி செட்டிநாட்டு உணவுகளானது தனித்துவமான மசாலாப் பொருட்கள் மற்றும் நுட்பமான சுவைகளின் மந்திர கலவையாகும். தனித்துவமான நறுமணம் மற்றும் ருசி இவற்றை ஒரு சிறந்த சமையல் படைப்பாக ஆக்குகின்றன.
காரைக்குடி செட்டிநாடு உணவு வகைகளுக்கு உலக அளவில் எந்த அறிமுகமும் தேவையில்லை, ஏனெனில் இது உலகெங்கிலும் உள்ள பல உணவுப் பிரியர்களை அதன் செழுமையான, காரம் மற்றும் தனித்துவமான சுவை உள்ளிட்ட அம்சங்களுடன் கவர்ந்துள்ளது. அந்த வகையில் செட்டிநாடு இறால் தொக்கு மிகவும் சுவையானது மற்றும் நன்கு காரசாரமாகவும் இருக்கும். இறால் தொக்கு தமிழகத்தில் அசைவப் பிரியர்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு அசைவ உணவு. இதற்கென இறால் பிரியர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உண்டு. அதிலும் குறிப்பாக செட்டிநாடு ஸ்டைல் இறால் தொக்கு என்றால் கேட்கவே தேவையில்லை அதனின் வாசமே வீட்டில் இருப்பவர்களை தானாக கிச்சனுக்கு கூட்டி வந்து விடும்.
நன்கு காரசாரமான மசாலாவில் ஊறி இருக்கும் இறாலை சுவைப்பதெ ஒரு தனி ருசி தான். மேலும் இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறும் இருக்கும். இனி இறால் எடுத்தால் எப்பவும் போல் இறால் கிரேவி, இறால் குழம்பு, இறால் 65, இறால் சில்லி அப்படின்னு ஒரே மாதிரி செய்யாமல் நல்லா காரசாரமா இந்த செட்டிநாடு இறால் தொக்கு ரெசிபி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இட்லி தோசை சாதம் உள்ள எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷன் இருக்கும். சுடு சாதத்துக்கும் பழைய சாதத்துக்கும் ஒரு சூப்பரான காமினேஷன். இப்போது, நாக்கில் எச்சில் ஊர வைக்கும் சுவையான செட்டிநாடு இறால் தொக்கு செய்வது எப்படி என இந்தப் பதிவில் காணலாம்.
இதனையும் படியுங்கள் : இறால் குறு மிளகு கிரேவி
Ingredients
Method
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் சிறிதளவு தண்ணீர் விட்டு இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும். அதன்பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும்.
பின் மிளகு தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு இறால் தொக்கு தயார்.






