செட்டிநாட்டு உணவென்று சொன்னாலே, உணவு விரும்பிகளுக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்தளவுக்கு இந்தியாவின் எந்த நகரத்துக்கு சென்றாலும், அங்கு செட்டிநாடு உணவகங்கள் இருப்பதை நாம் பாக்கலாம். செட்டிநாடு உணவின் ஸ்பெஷலே அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான். அந்தவகையில் சுவையான செட்டிநாடு பன்னீர் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! பன்னீர் கிரேவி சப்பாத்தி, பரோட்டா, நான், போன்றவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். பன்னீர் கிரேவி வட இந்தியாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை. இது பன்னீர் பட்டர் மசாலாவில் இருந்து வேறுபட்டது. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும்.
பன்னீர் டேஸ்ட்டான உணவு என்பது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் பன்னீர் ஹெல்த்தியான உணவும் கூட. இந்த பன்னீரை நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால் நமக்கு பல பயன்கள் கிடைக்கின்றன. பன்னீரில் கால்சியமும், புரதச்சத்துக்களும் உள்ளன. மேலும் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. வலுவான பற்கள் மற்றும் எலும்பு பெறவும், உடல் மெட்டாபாலிசத்தை மேம்படுத்தவும், உடல் மற்றும் மூட்டு வலியை குறைக்கவும் உதவுகிறது. தவிர பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கீல்வாதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. இன்னும் பல விதமான நன்மைகளை பன்னீரில் உள்ளன.
இப்போ பன்னீரை செட்டிநாடு ஸ்டைலில் எப்படி சமைக்கலாம் என்று பார்ப்போம் வாங்க. சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, முட்டை கிரேவி, இறால் கிரேவி, நண்டு கிரேவி இதுபோன்ற அசைவ கிரேவி ரெசிபிக்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான பன்னீர் மசாலா கிரேவி செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொண்டு நீங்களும் உங்கள் வீட்டில் செய்து கொடுத்து அசத்துங்கள். பன்னீர் கிரேவி வைத்து சாப்பிட்டு பாருங்கள் ரூசீகரமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அடுத்த முறையில் இதையே செய்யுங்கள் என்று விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள்.
செட்டிநாடு பன்னீர் கிரேவி | Chettinadu Paneer Gravy Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 தவா
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1 பாக்கெட் பன்னீர்
- உப்பு தேவையான அளவு
- 2 டேபிள் ஸ்பூன் பட்டர்
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- கஸ்தூரி மேத்தி தேவையான அளவு
- 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
அரைக்க :
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 3 வர மிளகாய்
- 1 அன்னாசி பூ
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் பன்னீரை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு தவாவை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து சதுரமாக வெட்டிய பன்னீர் சேர்த்து லேசாக பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்களை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- இவை ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
- கிரேவி கொதித்ததும் பன்னீரை சேர்த்து சிறிது நிமிடங்கள் வேகவிட்டு கசூரிமேத்தி சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான பன்னீர் செட்டிநாடு கிரேவி தயார். சப்பாத்தி பரோட்டா நாண் உடன் சேர்த்து பரிமாறலாம்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான பன்னீர் புலாவ் இனி இப்படி செஞ்சி பாருங்கள்! சுட சுட புலாவ் இப்படி செய்து கொடுத்தால் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!