தினம் சாதம், சாம்பார், பொரியல் என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான மற்றும் சுவையான உணவை சாப்பிட விரும்புகிறீர்களா? அப்போ பன்னீர் புலாவை முயற்சி செய்து பாருங்கள். விதவிதமான புலாவ் வகைகளில் அதிகமான மசாலாக்கள் சேர்க்காமல் செய்யப்படுவதால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. புலாவ்களில் பல வகை உண்டு, அதில் நாம் இங்கு காண இருப்பது பன்னீர் புலாவ். பன்னீர் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பன்னீரை பயன்படுத்தி பலவகையான சமையலை செய்யலாம். பன்னீரில் செய்த உணவு மிகவும் ருசியாக இருக்கும். பொதுவாக பன்னீர் பலருக்கும் பிடித்தமான ஒரு உணவு. இன்னும் சொல்ல போனால் பன்னீர்க்கு என்று ஒரு தனி கூட்டமே உண்டு. அந்த வகையில் புலாவ்வும் உணவுப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு வகை. அதனாலேயே பன்னீர் புலாவ்வுக்கு உணவு பிரியர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது.
இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையை பின்பற்றி செய்கிறார்கள். அதற்கேற்றவாரே வெவ்வேறு நாடுகளில் இவை வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. பன்னீர் புலாவ்யின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை செய்வதற்கு அதிக நேரம் பிடிக்காது. சமைக்க ஆரம்பிப்பவர்கள் கூட இதை மிக எளிதாக செய்துவிட முடியும். மேலும் பன்னீர் உடம்பிற்கு மிகவும் நல்லது என்பதினாலும் மற்றும் இதில் பல காய்கறிகளை நாம் சேர்ப்பதினாலும் இதை நாம் குழந்தைகளுக்கு எந்த பயமுமின்றி செய்து கொடுக்கலாம். இவை குழந்தைகளுக்கு மதிய உணவாக ஸ்கூலுக்கு மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்ல ஒரு அசத்தலான மதிய உணவு.
பன்னீர் புலாவ் | Paneer Pulao Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 3 கப் பாசுமதி அரிசி
- 1 பாக்கெட் பன்னீர்
- 2 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1 பிரிஞ்சி இலை
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 பெரிய வெங்காயம்
- 1 கேரட்
- 10 பீன்ஸ்
- நெய் தேவையான அளவு
- கொத்தமல்லி தழை சிறிதளவு
- 10 முந்திரி
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் பன்னீர் மற்றும் காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் பன்னீரில் சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து சிறிது நேரம் கழித்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது, காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
- அதன்பிறகு மிளகாய் தூள் மற்றும் கரம்மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.
- பின்னர் பாசுமதி அரிசியை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
- விசில் அடங்கியதும் குக்கரை திறந்து பன்னீர், முந்திரிபருப்பு, கொத்தமல்லி தழை, நெய் சேர்த்து கலந்துவிடவும். அவ்வளவுதான் சுவையான பன்னீர் புலாவ் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான மொறு மொறு பன்னீர் 65 இப்படி வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே ஒரு தரம் செய்து பாருங்க அட்டகாசமான ருசியில் இருக்கும்!